Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு அருளாலீசுவரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு அருளாலீசுவரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அருளாலீசுவரர்
  அம்மன்/தாயார்: அம்புஜ குசலாம்பாள்
  ஊர்: அழிசூர்
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  இக்கோயில் கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருந்தாலும், நுழைவுவாயில் தெற்கு நோக்கி அமைந்திருப்பது சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு அருளாலீசுவரர் திருக்கோயில் அழிசூர் காஞ்சிபுரம் மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
  மங்கல விநாயகர், முருகன், பைரவர், அம்புஜ குசலாம்பாள், லட்சுமி நாராயணர் சன்னதிகள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  கடன் தொல்லை, எதிரிகள் தொல்லை நீங்குவதுடன் நோயற்ற வாழ்வு கிடைக்க இங்குள்ள நந்திதேவரை வணங்கி செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இக்கோயில் கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருந்தாலும், நுழைவுவாயில் தெற்கு நோக்கி உள்ளது. கல்தூண் ஒன்று துவஜஸ்தம்பமாக நடப்பட்டுள்ளது. வெளிப்பிரகாரத்தில் நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது. இங்குள்ள நந்திதேவரை வில்வம், அருகம்புல், வெல்லம், ஏலக்காய் கலந்த பச்சரிசி கொண்டு வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை. பிரதோஷ காலங்களில் இவரை வழிபட்டால் கடன் தொல்லை, எதிரிகள் தொல்லை நீங்குவதுடன் நோயற்ற வாழ்வு கிடைக்கும். அன்னை அம்புஜ குசலாம்பாள் அபயஹஸ்தத்துடன் அருட்காட்சி தருகிறார். தேவியை தரிசித்த பின் முருகனையும், பைரவரையும் தரிசிப்பது சிறப்பு.  
     
  தல வரலாறு:
     
  தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த அழகிய கிராமம் அழிசூர். அழிஞ்சல் மரத்தடியில் லிங்கம் அமைத்து அகத்தியர் வழிபட்டதால் அழிசூர் என அழைக்கப்படுகிறது. கி.பி. 1123-ம் ஆண்டு விக்கிரமச் சோழனின் ஐந்தாவது ஆட்சியாண்டில் இக்கோயில் கட்டப்பட்டது. சுங்கந் தவிர்த்த சோழர் சதுர்வேதி மங்கலம் என்பது அழிசூர் கிராமத்தின் முந்தைய பெயராகும். செய்யாறு நதியின் தென்கரையில், சோழர் காலத்தில் கட்டப்பட்டது இந்த ஆலயம்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயில் கிழக்கு முகமாக அமைக்கப்பட்டிருந்தாலும்,நுழைவுவாயில் தெற்கு நோக்கி அமைந்திருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar