Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சதுர்புஜ கிருஷ்ணர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சதுர்புஜ கிருஷ்ணர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சதுர்புஜ கிருஷ்ணர்
  அம்மன்/தாயார்: பத்மவல்லி நாயகி
  ஊர்: வேப்பங்கொண்டபாளையம்
  மாவட்டம்: வேலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நாளில் திருவீதியுலா, சிறப்பு பூஜைகள், உறியடி உத்ஸவம்.  
     
 தல சிறப்பு:
     
  ருக்மிணி மற்றும் சத்தியபாமாவுடன், நான்கு திருக்கரங்களோடு அழகுற ஸ்ரீகிருஷ்ணர் தரிசனம் தருவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சதுர்புஜ கிருஷ்ணர் திருக்கோயில் வேப்பங்கொண்டபாளையம் வேலூர் மாவட்டம்.  
   
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மாதந்தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று இங்கு வந்து பிரார்த்தித்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்; சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 
    
நேர்த்திக்கடன்:
    
  இங்குள்ள கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்து, திருமஞ்சனம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இந்தத் தலத்து இறைவனுக்கு, சந்தானவேணுகோபால ஸ்வாமி எனும் திருநாமம். தாயாரின் திருநாமம் பத்மவல்லி நாயகி. ருக்மிணி மற்றும் சத்தியபாமாவுடன், நான்கு திருக்கரங்களோடு அழகுற தரிசனம் தருகிறார் ஸ்ரீகிருஷ்ணர். இதனால், இவரை சதுர்புஜ கிருஷ்ணர் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். ராமானுஜர், நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், பெரியாழ்வார் போன்ற ஆழ்வார் பெருமக்களும் இங்கே தரிசனம் தருகின்றனர். மலைகளும் பசுமையும் சூழ்ந்திருக்க, நடுநாயகமாக அமைந்திருக்கும் ஆலயத்தைத் தரிசித்தாலே, நம் துக்கமெல்லாம் பறந்தோடிவிடுகிறது. வலது புற மலையை கருடாத்ரி மலை என்றும், இடது புற மலையை ரிஷபாத்ரி மலை என்றும் சொல்வர்.  
     
  தல வரலாறு:
     
  பல்லவ தேசத்தின் வனப்பகுதி அது. அந்த வனத்தில் வேட்டையாடுவதற்காக மன்னன் அடிக்கடி வருவது வழக்கம். ஒரு நாள், நாளை விடிந்ததும், வேட்டைக்குச் செல்ல வேண்டும்; அனைவரும் தயாராக இருங்கள் என்று படையினருக்குத் தெரிவித்த மன்னன், உறங்கச் சென்றான். அன்றிரவு, மன்னனின் கனவில் வந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நீ வேட்டைக்குச் செல்லும் வனத்தில், எனக்கொரு ஆலயம் எழுப்பி, என்னை வழிபடு ! உன்னுடைய தேசத்தை செழிக்கச் செய்கிறேன். உனது குடிமக்களை எந்த நோய் நொடியும் அண்டாமல் பார்த்துக் கொள்கிறேன் என அருளினார். இதைக் கேட்டுச் சிலிர்த்து எழுந்த மன்னன், விடிந்தும் விடியாததுமாக வனத்துக்குச் சென்றான். அங்கே அருமை யானதொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, ஸ்ரீகிருஷ்ணருக்குக் கோயில் கட்டி வழிபட்டான். பிறகு, அந்த தேசம் செழித்துச் சிறந்தது என்கிறது ஸ்தல வரலாறு.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ருக்மிணி மற்றும் சத்தியபாமாவுடன், நான்கு திருக்கரங்களோடு அழகுற ஸ்ரீகிருஷ்ணர் தரிசனம் தருவது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar