Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வடவக்கூத்த அய்யனார் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வடவக்கூத்த அய்யனார் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வடவக்கூத்த அய்யனார்
  அம்மன்/தாயார்: பூரணா, புஷ்கலா
  ஊர்: தூத்தாகுடி
  மாவட்டம்: புதுக்கோட்டை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்ரா பவுர்ணமி  
     
 தல சிறப்பு:
     
  பொதுவாக அய்யனாருக்கு ஆடு வெட்டிப் படையலிடுவது வழக்கம். ஆனால் இங்கு பக்தர்கள் காவடி, பால்குடம், கரும்புத் தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வடவக்கூத்த அய்யனார் திருக்கோயில் தூத்தாகுடி, புதுக்கோட்டை.  
   
    
 பொது தகவல்:
     
  இங்கு விநாயகர், முருகன், நாகராஜன், பகளப்பன், லிங்கப்பன் ஆகிய தெய்வங்கள் எழுந்தருளியுள்ளனர்.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் திருமணம், வீடு கட்டுதல், தொழில் தொடங்குதல், வெளிநாடு செல்லுதல், கடன் தொல்லை தீர, தீராத நோய் குணமாக, தடைப்படும் திருமணம் நடைபெற, மழலைச் செல்வம் பெற அய்யனாரிடனம் வேண்டிக் கொள்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் காவடி, பால்குடம், கரும்புத் தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

தமிழ்நாட்டில் கிராமங்கள்தோறும் எழுந்தருளியிருக்கும் அய்யனார், சபரிமலை சாஸ்தாவாகிய ஐயப்பன்தான். ஐய்யபனே அய்யனராக எழுந்தருளியுள்ளதாக நம்பப்படுகிறது. அதிலும் வடவக் கூத்த அய்யனார் பூரணா, புஷ்கலா என இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளது மேலும் சிறப்பு. சுற்றுவட்டாரத்திலுள்ள மக்கள் தங்களது குடும்பத்தில் சுபகாரியங்கள் நடத்த முடிவு செய்தால், இங்கு வந்து திருவுளச் சீட்டு போட்டு அய்யனாரின் அனுமதி பெற்றே செயல்படுகின்றனர். திருமணம் நிச்சயித்த மணமகன் மணமகளை அழைத்து வந்து, அய்யனாரைப் பூஜித்து அவருக்கு மாலை அணிவித்த பின்னரே திருமணப் பணிகளைத் தொடங்குவர். அய்யனாரின் அருளால் இப் பகுதியில் பருவமழை தவறுவதோ, விளைச்சல் குறைவதோ இல்லை என்கிறார்கள் பக்தர்கள்.

அய்யனாரிடம் நிமித்தம் கேட்பதும் இக் கோவிலில் நடைமுறையில் இருக்கிறது. தாங்கள் மனதில் நினைத்து வந்த காரியம் நிறைவேறுமா என்று அறிய மூலவர்முன் எழுந்தருளியுள்ள குதிரைகளின் எதிரில் நின்று அய்யனாரை வணங்கி உத்தரவு கேட்பர். பல்லிச் சத்தம் மூலம் அய்யனார் நிமித்தம் தெரிவிப்பார். பல்லிச் சத்தம் எந்த இடத்தில் நிமித்தம் காட்டுகிறது என்பதைப் பொறுத்து அவர்கள்  அந்தச் செயலைச் செய்யவோ செய்யாமலிருக்கவோ முடிவு செய்வர். அய்யனாரிடம் உத்தரவு கிடைத்துச் செய்த காரியங்கள் எதுவும் தோல்வியடைந்ததே இல்லை என்பது பக்தர்களின் அனுபவம்.

முதலில் கோயிலுக்கு வந்து அய்யனாரிடம் முறையிட்டு வழிபட வேண்டும். பின் பதினொரு நாட்கள் அய்யனாருக்கு விரதமிருக்க வேண்டும் பதினொரு நாட்கள் முடிந்ததும் மீண்டும் வந்து அவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்களுக்கு அவர்களது வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும். காரியம் நிறைவேறியதும் அய்யனாருக்கு அபிஷேகம் செய்து குதிரைகளுக்கு மாலை அணிவிக்க வேண்டும்.

 
     
  தல வரலாறு:
     
 

இந்த அய்யனார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்றும்; ராமேஸ்வரத்திற்கு இந்த வழியாக தீர்த்த யாத்திரை சென்ற அகத்திய மாமுனிவர் தனது யாத்திரை தடையின்றி நிறைவேற இவரை வேண்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. எட்டியத்தளி அகத்தீஸ்வரர் ஆலயத் திருப்பணியில் ஈடுபட்டிருந்த காளியங்கராய மன்னனிடம் வடவக்கூத்த அய்யனாரை வணங்கி திருப்பணியைத் தொடங்கும்படி ஆலோசனை கூறினாராம் அகத்தியர். அதன்படியே அய்யனாரின் அருளால் அகத்தீஸ்வரர் ஆலயத் திருப்பணியை மன்னன் செய்து முடித்தான் என்பது வரலாறு.

ஆரம்பத்தில் காட்டுப் பகுதியாக இருந்த இந்த இடத்தில் கீற்றுக்கொட்டகையில் மக்கள் இவரை வழிபட்டு வந்தனர். பின்னர் கோவில் ஓட்டுக் கொட்டகையாகவும், ஒருநிலைக் கோபுரமாகவும் உயர்ந்து, தற்போது பரிவார தெய்வங்களுடன் சிறப்பாகக் காட்சியளிக்கிறார். அய்யனார் இவ்வழியாகச் செல்லும் மக்கள் தங்கள் குறைகளை இவரிடம் சொல்ல குறைகள் உடனுக்குடன் நிவர்த்தியானதால் அய்யனாரை தங்கள் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர்.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பொதுவாக அய்யனாருக்கு ஆடு வெட்டிப் படையலிடுவது வழக்கம். ஆனால் இங்கு பக்தர்கள் காவடி, பால்குடம், கரும்புத் தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar