Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி
  உற்சவர்: வளளி, தெய்வானையுடன் பாலசுப்பிரமணியர்
  அம்மன்/தாயார்: கெஜவள்ளி
  தல விருட்சம்: வில்வமரம்
  தீர்த்தம்: சரவண தீரத்தம்
  ஆகமம்/பூஜை : காமிக ஆகமம்
  ஊர்: இளையனார்வேலூர்
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை திருவவிழா,பிரமோற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம்,ஆவணியில் பவித்திர உற்சவம், புரட்டாசியில் கெஜவள்ளிககு நவராத்திரி உறசவம்.  
     
 தல சிறப்பு:
     
  சுவாமிநாத சித்தரால் இக் கோவில் உருவாக்க்ப்பட்டது. மலையன், மாகறன் இந்த அசுரர்களை அஸ்ர பிரயோகம் செய்தபோது அவரது வேல் நின்ற ஊர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இளையனார்வேலூர், காவாந்தண்டலம் அஞ்சல் காஞ்சிபுரம் மாவட்டம் - 631601.  
   
போன்:
   
  +91 9789635869 
    
 பொது தகவல்:
     
  கோயில் அமைப்பு:  சதுரம் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம்.  
     
 
பிரார்த்தனை
    
  சத்ருகோமம், எதிரி தொல்லை,வியபார நஷ்டம்,குழந்தை வரம். திருமண தடை நீக்கத்திற்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் காவடி, பால் காவடி, புஷ்ப பல்லக்கு எடுத்து வேணடுதல் செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
 

மேனா உற்சவம், மாசி மகத்தை முன்னிட்டு சீயமங்களம்பேட்டை, தாங்கி, வில்லிவலம், ஏகவாம்பேட்டை, நத்தபேட்டை,கிதிரிபேட்டை, வெங்குடி ராஜம்பேட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு சுவாமி எழுந்தருள்வார். மலையன் ,மாகறன். என்ற அசுரர்களை சிவபெருமான் கட்டளைக்கிணங்க காசிப முனிவர் யாகத்தை தடுக்க முயன்ற அசுரர்களை வென்றார்.

 
     
  தல வரலாறு:
     
  சுவாமிநாத சித்தரால் இந்த கோவில் உருவாக்கப்பட்டது. மலையன், மாகறன் என்ற அசுரர்களை முருகனின் தந்தை வசிக்கும் அருகில் உள்ள கடம்பரை பகுதியில் காசிப முனிவர் யாகத்தை தடுக்க நினைத்த அசுரர்களை இறைவன் சிவபெருமானை வேண்டினார். அவருக்கு காட்சி கொடுத்து என் மகன் முருகன், அவர்களை அழித்து யாகத்தை நடத்த உதவி புரிவான் என்று கூறினாராம். அதன்படி தந்தையின் கட்டளைக்கு இணங்க முருகப்பெருமான் கடம்பேரி பகுதியில் தொல்லை கொடுத்து வந்த அந்த இரண்டு அசுரர்களை அழித்து, அவர் விட்ட வேல் விழுந்த இடமாக இந்த தலம் விளங்குவதால், வேல் விழுந்த இடமாக இருப்பதாலும், இளையவர் என்பதாலும் இப்பகுதிக்கு இளைனார்வேலூர் என்ற பெயர் பெற்றது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சுவாமிநாத சித்தரால் இக் கோவில் உருவாக்க்ப்பட்டது. மலையன், மாகறன் இந்த அசுரர்களை அஸ்ர பிரயோகம் செய்தபோது அவரது வேல் நின்ற ஊர்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar