Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: முத்தாலம்மன்
  ஊர்: சிவகாசி
  மாவட்டம்: விருதுநகர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வடகத்தியம்மன் திருவிழா, ஆண்டுதோறும் தை கடைசி செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து மாசி மாதத்தில் உச்சநிலையை அடைந்து பங்குனி மாதக் கடைசியில் நிறைவு பெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  சிவகாசியில் நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்களில், நான்கு வீதிகள் சந்திக்கும் இடங்களில் வடக்கத்தியம்மன் மற்றும் முத்தாலம்மன் என்ற சிறிய மண்டபம் அமைத்து, அதனுள்ளே அணையாத விளக்கு எரிந்து கொண்டேயிருக்கிறது வீதிகள்தோறும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் சிவகாசி, விருதுநகர்.  
   
    
 பொது தகவல்:
     
  முச்சந்திகள் கூடும் இடங்களில் எல்லாம் சிறிய மண்பீடம் அமைத்து, அதற்குள் அணையாத தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளது.   
     
 
பிரார்த்தனை
    
  திருமண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  முத்தாலம்மன் உருவத்தில் வைத்திருக்கும் தென்னம்பாளையை அரைத்து அதில் தீர்த்தம் கலந்து குழந்தையில்லாத தம்பதிகளுக்கு வழங்க குழந்தை வரம் கிட்டும். 
    
 தலபெருமை:
     
  வீடுகளில் நடக்கும் விசேஷங்கள், தொழில் துவங்கும்போது ஒரு பங்குதாரராகவும், பாதுகாப்பாளராகவும் அம்மனை குடும்பத்தில் ஒருவராக வணங்கத் துவங்கினர்.  
     
  தல வரலாறு:
     
  கந்தக பூமி, கரிசல் காடாக இருந்த சிவகாசியில் பழமையான தொழில். புகையிலை மற்றும் மானாவாரி பயிர்கள்தான் விவசாயம். 300 ஆண்டுகளுக்கு முன்பாக ஊரைக் கொள்ள நோயும், அம்மை நோயும் வாட்சி வதைத்த வேளையில் திக்குத்திசை தெரியாமல் மக்கள் பரிதவித்தபோது, அவர்களைக் காப்பாற்ற அவதரித்து வந்தவள்தான் வடக்கத்தி அம்மன் என்று கும்மிப்பாடல்கள் கூறுகின்றன. வேப்பிலைச்சாறும், மஞ்சள்நீரும் மட்டுமே மருந்தாகக் கொண்டு நோய்களை விரட்டிய அந்த அம்மனுக்கு வீதிதோறும் திருவிழாக் கொண்டாட்டம் துவங்கியது. ஒருநாள் கொண்டாடத்துடன் நிறுத்தாமல் தினசரி தங்களைக் காத்த அம்மனுக்கு பிரதி உபகாரமாக ஏதேனும் செய்ய நினைத்த மக்கள் கோயில் கட்ட முடிவெடுத்தனர். பிரம்மாண்டமான கோயில் எழுப்ப வசதியில்லாததால், முச்சந்திகள் கூடும் இடங்களில் எல்லாம் சிறிய மண்பீடம் அமைத்து, அதற்குள் அணையாத தீபம் ஏற்றும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சிவகாசியில் நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்களில், நான்கு வீதிகள் சந்திக்கும் இடங்களில் வடக்கத்தியம்மன் மற்றும் முத்தாலம்மன் என்ற சிறிய மண்டபம் அமைத்து, அதனுள்ளே அணையாத விளக்கு எரிந்து கொண்டேயிருக்கிறது வீதிகள்தோறும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar