Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வரதராஜப்பெருமாள்
  அம்மன்/தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
  ஊர்: திருநகர்
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  புரட்டாசி சனிக்கிழமைகளிலும், மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.  
     
 தல சிறப்பு:
     
  மூலவர் வரதராஜ பெருமாளாக அருட்காட்சியளிப்பதால், வளாகத்திலுள் அனைத்து சுவாமிகளின் பெயருக்கு முன்பு வரத என சேர்க்கப்பட்டுள்ளது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் அமைதிச்சோலைநகர், திருநகர், மதுரை.  
   
போன்:
   
  +91 94865 55299 
    
 பொது தகவல்:
     
  மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வரதராஜப்பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கோயில் வளாகத்தில் நாகர்களுடன் வரத விநாயகர் சன்னதியும், நம்மாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனி தனி சன்னதியிலும், மூலவருக்கு எதிரில் கருடாழ்வார் சன்னதியும், மார்பில் ராமருடன் ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் தனி சன்னதியிலும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  இங்கு பெருமாளை வேண்டுவோர், வேண்டிய வரங்களை பெறுகின்றனர். போட்டி தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றிபெறுவதும். வியாதிகள் குணமாவதும் ஐதீகமாக நம்பப்படுகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு திருமஞ்சனம் செய்தும் துளசி மாலை அணிவித்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  மூலவர் வரதராஜ பெருமாளாக அருட்காட்சியளிப்பதால், வளாகத்திலுள் அனைத்து சுவாமிகளின் பெயருக்கு முன்பு வரத என சேர்க்கப்பட்டுள்ளது. கோயிலில் தினமும் இருகால பூஜைகள் நடக்கிறது. புதன் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரங்களுடன் சுவாமி அருள்பாலிக்கின்றார். . இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றுப்படி செய்தால், நினைத்த காரியங்கள் கைகூடும், என்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  மாலவன்குன்று என்றழைக்கப்படும் இப்பகுதி குடியிருப்புகளாக மாறுவதற்கு முன்பு விளைநிலங்களாக இருந்துள்ளன. அப்போது இந்த சிறிய குன்றுதான் நெல் கதிர் அடிக்கும் களமாக இருந்தது. இந்த சிறிய குன்றில் மீது கோயில் அமையப் பெற்றிருப்பது சிறப்பு. இங்கு விமானத்துடன் கூடிய கோயில் சமீபத்தில் தான் கட்டப்பட்டது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் வரதராஜ பெருமாளாக அருட்காட்சியளிப்பதால், வளாகத்திலுள் அனைத்து சுவாமிகளின் பெயருக்கு முன்பு வரத என சேர்க்கப்பட்டுள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar