Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வரதராஜர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வரதராஜர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வரதராஜர்
  உற்சவர்: ராஜகோபாலசுவாமி
  அம்மன்/தாயார்: செங்கமலத்தாயார்
  தல விருட்சம்: துளசி
  தீர்த்தம்: ராமபூஷ்கரணி
  ஊர்: கண்கொடுத்த வனிதம்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ராமநவமி, சித்திரை அட்சயதிருதியை, ஆடி அமாவாசை, தை அமாவாசை, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  ராமன், ராவணனை வதம் செய்து, சீதையை அழைத்துக் கொண்டு பட்டாபிஷேத்திற்கு அயோத்திக்கு செல்லும் போது பரத்துவராஜர் முனிவர், ஆசிரமத்தில் தங்கி, திருமண கோலத்தில் சேவை சாதித்தது இங்கு தான் என கூறப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வரதராஜர் திருக்கோயில் கண்கொடுத்த வனிதம்(காவாளக்குடி) கண்கொடுத்த வனிதம் அஞ்சல் திருவாரூர் மாவட்டம்-610113  
   
போன்:
   
  +91- 94431-35129 
    
 பொது தகவல்:
     
  மூலவர் கிழக்கு சன்னதியில் அருள்பாலிக்கிறார், கோயிலில் நுழைவுவாயில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. பிரகாரத்தில் கொடிமரம், பலி பீடம், உள் மண்டபத்தில் வலது பக்கம் நரசிம்மர் மடியில் லட்சுமி அமர்ந்து அருள்பாலிக்கிறார். வலது பக்கம் ஆஞ்சநேயரும் அவருக்கும் பின்பக்கம் ஆழ்வார்கள் அமர்ந்திருக்கின்றனர். உள் பிரகாரத்தில் ராஜகோபால சுவாமி அருள்பாலிக்கிறார்.  
     
 
பிரார்த்தனை
    
  திருமண வரம் கிடைக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், நவகிரக தோஷ பீடைகள் தீரவும், கண் நோய் குணமடையவும் இங்க பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தயிர் சாதம் படைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என செவிவழிச் செய்திகள் கூறப்படுகிறது. சோழ மன்னர்கள் வழிபட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  இங்குள்ள நயனவரதேஸ்வரர் திருக்கோயிலில் ஒருத்தாய் தன் குழந்தைக்கு கண் வேண்டி இறைவனிடம் வழிப்பட்டார். பின்னர் தன் குழந்தைக்கு கண் பார்வை கொடுத்தால், தன் கண்ணை வழங்குவதாக பிரார்த்தனை செய்துள்ளார். குழந்தைக்கு இறைவன் அருளால் பார்வை கிடைத்தது. பின்னர் அந்த தாய் தன்  கண்ணை இறைவனுக்கு வழங்க முற்பட்ட போது, இறைவன் தடுத்து காட்சி அளித்ததால் இந்த ஊருக்கு கண் கொடுத்த வனிதம் என அழைக்கப்பட்டுள்ளது.

தாய் தன் பிள்ளைக்கு கண் பார்வை பெற்றப்பின் உறவினர்களிடம் சென்று தான்பட்ட துயரத்தை கூறுவது போன்று சிவனிடம் வரம்பெற்ற அந்த தாய் இங்குள்ள பெருமாள் கோயிலில் ஆசிப் பெற்று நடந்த விதத்தை கூறி கதறி அழுதுள்ளார் என்பதும் கூறப்படுகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ராமன், ராவணனை வதம் செய்து, சீதையை அழைத்துக் கொண்டு பட்டாபிஷேத்திற்கு அயோத்திக்கு செல்லும் போது பரத்துவராஜர் முனிவர், ஆசிரமத்தில் தங்கி, திருமண கோலத்தில் சேவை சாதித்தது இங்கு தான் என கூறப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar