Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காமாட்சியம்மன்
  உற்சவர்: காமாட்சியம்மன்
  அம்மன்/தாயார்: காமாட்சியம்மன்
  தல விருட்சம்: வேம்பு, அரசு
  தீர்த்தம்: சிவக்குளத்து தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  புராண பெயர்: புத்த பிட்சுகள் சன்னிதானம் மேற்கொண்டு வந்ததால் இப்பகுதி புத்த பிட்சு மங்கலம் என்றாகி பின்னாளில் பூதமங்கலம் என்றாகியுள்ளது.
  ஊர்: பூதமங்கலம்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரையில் 10 நாள் உற்சவம் மற்றும் அம்மனுக்குரிய அனைத்தும் விசேஷங்களும் கொண்டாடப்படுகின்றனர்.  
     
 தல சிறப்பு:
     
  இந்த கோயிலின் வடக்கே, பழமையான சோழர்காலத்து சிவன் மற்றும் வடக்கு பக்கம் ஜலகிரிஸ்வரர் கோயிலும், தெற்கே காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியர் பிறந்த இருள் நீக்கி கிராமமும், கிழக்கே திருநெல்வேலிக்காவல் நெல்லிவனநாதர் கோயிலும், மேற்கே திருராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலும் இருப்பது இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8.30 மணி முதல் காலை 10.30 மணி வரை மாலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், குன்னியூர் அஞ்சல், மன்னார்குடி தாலுகா, பூதமங்கலம், திருவாரூர் மாவட்டம்614711.  
   
போன்:
   
  +91 98430 57326 
    
 பொது தகவல்:
     
  கிழக்குப்பக்கம் வாயில் கற்பகிரகத்தில் ஒரு கலசம், மகா மண்டபத்தில், 200 பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யலாம். மகாமண்டபத்தில் விநாயகர், பாலமுருகன், வைணவராகப் பெருமாள், பெத்தனர்சுவாமி பொம்பியுடனும், உத்தரண்டாயர்(சிவன்) மற்றும் பேச்சியம்மாள் அருள் பாலிக்கின்றனர்.  கோயிலுக்கும் வெளியில் வீரன் வாயில் தெய்வமாகவும், பெத்தனார்சாமி நின்ற நிலையிலும், குளத்தின் அருகில் வெள்ளை விநாயகர் தனி சன்னிதியிலும், அருகில் வாய்க்காலில் கிடந்த லிங்கத்தை சிறு கொட்டகை அமைத்துள்ளனர்.  
     
 
பிரார்த்தனை
    
  குடும்ப வழிபாடு, திருமணத்தடை, புத்திரபாக்கியம், தொழில் அபிவிருத்தி, பொற்கொல்லர்கள் போன்ற ஏராளமான பிரார்த்தனைகளுக்காக வழிபடுகின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனைகள் நிறைவேறியதும், புதிய தாணிங்கள் மற்றும் கிடா காணிக்கை, முளைப்பாரி அமைத்தல், பால் பள்ளையம் மற்றும் சேவல் விடுதல் போன்றவை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  பழங்காலத்தில் பொற்கொல்லர்கள் குல தெய்வ வழிபாடு நடத்தியுள்ளனர். பிற்காலத்தில் சேதமடைந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்த சாமிதேவர் கனவில் தோன்றிய அம்மன் கோயிலை புதுப்பிக்க கூறியதன் பேரில் சொந்த முயற்சியில் கோயிலை புதுப்பித்துள்ளார்.

 
     
  தல வரலாறு:
     
  சோழர்காலத்தில் சோழர் வம்சத்தினர்களுக்கு தங்க நகை மற்றும் ஆபரணங்கள் செய்து வழங்கிய பொற்கொல்லர்கள் அப்பகுதியில் தங்கினர். சோழர் குலத்தினர்களுக்கு நகை செய்ய செல்லும் முன் இக்கோயிலில் முதலில் வழிபாடு செய்துள்ளனர். காலப்போக்கில் பழுதடைந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி கனவில் தோன்றி பழுதடைந்துள்ள கோயிலை கட்டி புதுப்பிக்க அம்மன்  தெரிவித்ததன் பேரில் கோயில் கட்டப்பட்டுள்ளது. பின்னர்  அப்பகுதியினர் பராமரித்து குல தெய்வ வழிபாடுநடத்தி வருகின்றனர் பழமையான கோயிலாகும். தற்போது புதுப்பித்து 2013 செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இந்த கோயிலின் வடக்கே, பழமையான சோழர்காலத்து சிவன் மற்றும் வடக்கு பக்கம் ஜலகிரிஸ்வரர் கோயிலும், தெற்கே காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியர் பிறந்த இருள் நீக்கி கிராமமும், கிழக்கே திருநெல்வேலிக்காவல் நெல்லிவனநாதர் கோயிலும், மேற்கே திருராமேஸ் வரம் ராமநாதசுவாமி கோயிலும் இருப்பது இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar