Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பெத்தனாஸ்ரவன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பெத்தனாஸ்ரவன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பெத்தனாஸ்ரவன்
  அம்மன்/தாயார்: பெரியநாயகி
  தல விருட்சம்: வேம்பு
  தீர்த்தம்: கிணறு
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  புராண பெயர்: தேவர்களை கண்ட ஊர்
  ஊர்: தேவர்கண்ட நல்லூர்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பங்குனி உத்திரம், சிவராத்திரி உள்ளிட்ட அனைத்து விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  ஆதி உத்ராண்டையர் உள்ளிட்ட அனைத்து விக்கரங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை மாலை 5 மணிமுதல் இரவு 7 மணிவரை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  அருள்மிகு பெத்தனாஸ்ரவன் திருக்கோயில், தேவர் கண்ட நல்லூர் மற்றும் அஞ்சல், குடவாசல் தாலுகா, திருவாரூர்- 613704.  
   
போன்:
   
  +91 98659 81789 
    
 பொது தகவல்:
     
  தேவர்கள் இருப்பதை முனிவர்கள் கண்டு வணங்கியதால் தேவர்களை கண்ட ஊர் என்பதே பின்னாளில் தேவர் கண்ட நல்லூர் என மருவியது.  கோயில் தெற்கு பக்கம் வாயிலில், கோயில் உள்ளே தலை விருட்சமான வேப்ப மரம் உள்ளது.  மகா மண்டபம் ப வடிவில் அமைக்கப்பட்டுஉள்ளது. 1000 பேர் அமர்ந்து தரிசனம் செய்யும் வசதி உள்ளது. கோயிலில் 16 கலசங்கள் உள்ளது. கோயிலில் ஆதி உத்தண்டராயர், எமதூதன், எமதர்மராஜன், மூலவர்களாக பெரியாச்சி, ஜஷ்டிதேவி, பிடரி, சாஸ்தா, முருகன் ஆகியோர் மேற்கு பக்கம் பார்த்த வகையில் அருள்பாலிக்கின்றனர். மேலும் காத்தாயி அம்மன், முருகன் மயில் வாகனத்தில் அமர்ந்து வடக்கு பக்கம் பார்த்தும், நடராஜர், பிரம்மநாயகி, பத்ரகாளி, பெத்ராயஸ்வரர், பூத கணங்கள், ரிஷிமுனிவர், தூண்டில்காரன், வீமன் உள்ளிட்ட சில விக்ரகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் முற்பட்ட கோயில். கடந்த 2009ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  சகல தோஷங்களுக்கும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. பலருக்கும் குல தெய்வமாக உள்ளதால் குலதெய்வவழிபாடு நடக்கிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  புது தானியங்கள், ஆடு, கோழி, புறா போன்றவை உயிருடன் காணிக்கை செலுத்துகின்றனர். அதுமட்டுமின்றி மாவிளக்கு, காவடி, பால்குடம் எடுத்தல் போன்றவையும் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  திருவாரூர் தியாகராஜர்கோயில், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்  இக்கோயிலுக்குபெருமை சேர்க்கிறது.  
     
  தல வரலாறு:
     
  வல்லால மகாராஜன் மனைவி நிறைமாத கர்ப்பினியாக இருந்தாள். அப்போது அவள் வயிற்றில் வளர்ந்த குழந்தை மண்ணில் பிறந்து விழுந்தால் நாட்டிற்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதால் குழந்தை கீழே விழாமல் குறிப்பாக உயிருடன் பிறக்காமல் இருக்க வேண்டும் என தேவர்கள் முனிவர்கள் பார்வதியிடம் வரம் கேட்டனர். அப்போது அந்த குழந்தை உயிருடன் பிறக்காமல் அழிக்க மருத்துவச்சி வேடம் பூண்டி பார்வதி தேவி நடந்து வருகிறார். அப்போது வல்லால மகாராஜன் அவரை அழைத்து வந்து தன்மனைவிக்கு மருத்துவம் பார்க்க கேட்கிறான்.

இதை சாதகமாக பயன்படுத்தி குழந்தையை அழித்து, ஒரு சொட்டு ரத்தம் கூட கீழே விழாமல் பார்வதி தாயார் காத்தார். தன் பிள்ளையை மருத்துவச்சி கொன்று விட்டார் என்ற தகவலறிந்த வல்லால மகாராஜன் வாளால் வெட்ட முயன்ற நேரத்தில் ஆக்ரோஷமாக மாறிய தேவியார் அந்த மகாராஜன் தலையை வெட்டி விடுகிறார். தேவியாரின் ஆக்ரோஷத்தை போக்க  பெருமாள் பெத்தரான்ய ஈசனாகவும், ஈசன் உத்தராண்டராயராகவும், பல்வேறு தேவதைகள் உருமாற்றம் கொண்டு தேவியரின் ஆக்ரோஷத்தை தீர்த்தார்கள். அதன் பின் இங்கு கோயில் எழுப்பியுள்ளனர். விநாயகருக்கு இந்த செயல் பிடிக்காததால் அவர் அங்கு வரவில்லை என்பதால் அவர் சிலை இங்கு பிரதிஷ்டை செய்யவில்லை. அதன் பின் அப்பகுதியினர் கோயில் கட்டி குடமுழுக்கு செய்துள்ளனர். தற்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பலரும் குல தெய்வமாக வழிபாடு நடத்தி வருகின்றனர். அதனால் கோயிலில் பல்வேறு விக்ரகங்களை காணிக்கையாக செய்து வைத்துள்ளனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஆதி உத்ராண்டையர் உள்ளிட்ட அனைத்து விக்கரங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar