Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பாண்டுரங்கன்
  அம்மன்/தாயார்: ருக்மிணிதேவி, ரகுமாயி
  தீர்த்தம்: சந்த்ரபாகா நதி
  ஊர்: பந்தர்பூர்
  மாவட்டம்: சோலாப்பூர்
  மாநிலம்: மகாராஷ்டிரா
 
 திருவிழா:
     
  ராமநவமி, கோகுலாஷ்டமி  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோயில், பந்தர்பூர், சோலாப்பூர் மாவட்டம் மஹாராஷ்டிரா.413304  
   
போன்:
   
  +91 2186 224 466 
    
 பொது தகவல்:
     
  ஸ்ரீகிருஷ்ணன் தனது பட்டத்து ராணி மாதா ஸ்ரீ ருக்மிணிதேவியுடன் வந்து அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்ட புண்ணிய பூமி. அதற்கு சாட்சியாக பல விஷயங்கள், பல இடங்கள், பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டு வைக்கப் பட்டிருக்கும் பொருள்கள், என்று எங்கு சென்றாலும் ஸ்ரீகிருஷ்ணனின் புகழ் தான் அங்கு பாடப்படுகிறது. அதைத் தெரிந்து கொண்டுப் பார்க்கப் பார்க்க நம்மையும் மீறி ஒரு பரவசம் நம்மைச் சூழ்ந்து கொள்ளும். பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் பண்டரிபுரத்தை தமது வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று சந்த்ரபாகா நதியில் நீராடி, ஸ்ரீ விட்டலை தரிசனம், பிரதஷிணம், நாமசங்கீர்த்தனம் செய்வதால் நமது பிறவிப் பயன் அடைகிறது என்று பக்த துக்காராம் கூறுகிறார். என்றாலும், தற்போது சந்திர பாகா நதி (கங்கைக்கும் பழையது - மிகவும் புராதனமானது என்று சொல்லப்படுகிறது).

தன்னை ஈன்ற பெற்றோர்களை யாரொருவர் மதித்து அன்புடனும் கருணையுடனும் பாதுகாகிறார்களோ அவர்களுக்கு பிரத்யக்க்ஷமாக உடனிருந்து காப்பான் விட்டலன் என்னும் ஐதீகம் இங்கு நிலவுகிறது. அதற்குச் சாட்சியாக பல புராணக் கதைகளும் சொல்லப்படுகிறது. கோயிலைச் சுற்றி ஏகப்பட்ட கடைகள், துளசிமணி மாலைகள், பஜனைக்குரிய பொருட்கள், சந்தனக் கட்டைகள், வீர சிவாஜியின் படங்கள், ஸ்ரீ விட்டலனின் படங்கள் என்று யாத்திரிகர்களை கவரும் வகையில் கொட்டிக் கிடக்கிறது. தயிரும், பாலும், லஸ்ஸியும் மிகவும் தரமும் சுவையுமாக வழி நெடுகக் கிடைக்கிறது. மற்றபடி சப்பாத்தி தான். சோள ரொட்டி தான். ஒரு நாள் வாடகையாக ரூபாய் ஆயிரத்தில், நிறைய தங்கும் விடுதிகளும் இருக்கின்றன.
 
     
 
பிரார்த்தனை
    
  ஆடிமாதம் இந்த விட்டல் வந்ததால் ஏகாதசி அன்று மிகச் சிறப்பாக விரதம் இருந்து மராட்டியர்கள் கொண்டாடுகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  பண்டர்பூர் ஒரு சின்ன கிராமம் தான். அந்தப் பழமையான கோயில் தான் பிரதானம், பண்டரி யாத்திரை ஆத்ம சுகத்தை அளிக்கும் என்று நாமதேவர் கூறுகிறார். பரப்ரஹ்ம ஸ்வரூபமே பாண்டுரங்கன். அவனைப் பாடுங்கள் என்கிறார் ஆதிசங்கரர். சந்த் ஞானேஸ்வர் முதல் துக்காராம் வரை பல பக்தர்கள் பாடிய ஆயிரக்கணக்கான அபயங்கள் பக்தியில் நம்மைத் திளைக்க வைக்கிறது. தினமும் 24 மணிநேரமும் பகவான் நாம சங்கீர்த்தனம் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒரே புண்ணியக்ஷேத்திரம் பண்டரிபுரம். ஜெய் ஜெய் ராமகிருஷ்ண ஹரி என்ற ஒரே நாமம் எங்கும் ஒலித்தபடியே இருக்கும் பண்டரிபுரத்தில், பக்தர்கள் ஒவ்வொருவரும் தனது பாதக் கமலங்களைத் தொட்டு வந்தனம் செய்யும் பாக்கியத்தை அருளும் ஸ்ரீ விட்டலும் மாதா ஸ்ரீ ருக்மிணியும் (ஸ்ரீ ரகுமாயி) இங்கு சந்த்ரபாகா நதிக்கரையில் கோயில் கொண்டுள்ளார்கள். கோயிலின் உள்ளே செல்லச் செல்ல அழகான சிற்பங்கள் நிறைந்த கருங்கல் தூண்கள், ஆண்டுகள் பல கடந்த கையெழுத்துப் படியில் எழுதப்பட்ட மஹாபாரதக் காவியத்தை கண்ணாடிப் பெட்டியில் பொக்கிஷமாக வைத்திருக்கிறார்கள். ஸ்ரீவிட்டலின் அருகில் சென்று அவரது திருப்பாதங்களில் நமது சிரசை வைத்து வணங்க அனுமதிக்கிறார்கள். சாலிக்கிராமத்தில் அமைந்த அழகாக இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு கம்பீரமாகச் சிரிக்கும் விட்டலன் நம்மைப் பார்த்து வந்துவிட்டாயா என்று கேட்பது போலவே இருப்பது வியப்பு. துளசியும், சந்தனமும் மணக்க மணக்க தெய்வீகம் நிறைந்த கோயில்.  
     
  தல வரலாறு:
     
  ஆடி மாதம் வரும் ஏகாதசி மஹராஷ்டரத்தில் ஆஷாட ஏகாதசி என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். காவடிப் போல் தோளில் இருபக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்து விட்டு வருவார்கள். பண்டரிபுரம் வரை பொடி நடைதான். நடு நடுவே சில பிரபுக்கள் அவர்களுக்கு வயிற்றுக்கு உணவும் பெரிய பந்தல் போட்டு படைப்பார்கள். சிறுவர்களும் இதில் கூட்டம் கூட்டமாகப் போவார்கள். அவர்கள் வாயில் பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா என்றும் விட்டல் விட்டல் ஜய ஜய விட்டல் என்றும் விடாமல் நாமஜபம் வந்துக் கொண்டிருக்கும் அந்த நாமம் கேட்டாலே உடலெல்லாம் புல்லரிக்கும். அந்த விட்டல் எப்படி வந்தார்? லோக தண்டம் என்ற காட்டில் ஜன்னு முனிவர் வாழ்ந்து வந்தார் அவர் மனைவியின் பெயர் சாத்தகி. அவருக்கு பலவருடங்கள் கழித்து ஒரு மகன் பிறந்தான். அவன் பிறந்தும் ஏன் பிறந்தான் என்று அவர்களுக்கு ஆகிவிட்டது. அவன் பெயர் புண்டரீகன் . எதைப் பார்த்தாலும் அழிப்பான் துன்புறுத்துவான் நாய் மேல் கல் வீசுவான், முயலின் காதைத் திருகுவான். இப்படி முரடாகவே வளர்ந்து பெற்றோர் பேச்சைக் கேட்காமல் பதிலுக்கு எதிர்த்துப் பேசவும் துணிந்தான், அவனுக்கு திருமணம் செய்தால் வழிக்கு வருவான் என்று எண்ணி புண்டரீகனுக்கு அவன் தந்தை ஒரு நல்லப் பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தார். ஆனாலும் அவன் செயலில் மாறுதல் இல்லை, வீட்டில் மனைவி இருக்கும் போதே வெளியிலேயே இன்பம் தேடினான்.

அவன் தந்தை மனம் ஒடிந்து வருந்தி அவனுக்குப் புத்தி கூறினார். அதற்கு அவன் அப்பா நான் என் இஷ்டப்படி தான் இருப்பேன், இந்த வீட்டில் எனக்கு சுதந்திரமில்லை ஆகையால் நான் இந்த வீட்டை விட்டுப் போகிறேன் என்று கத்தி தன் மனைவியுடன் வீட்டைவிட்டு வெளியேறினான். அவன் பெற்றோர் மனமுடைந்துப் போனார்கள். பலநாடகள் பிறகு அவர்கள் ஒரு குழுவுடன் காசி யாத்திரைக்குக் கிளம்பினார்கள். ஒரே மகன் தனக்கு இருந்தும் இப்படி விதி ஆகி விட்டதே என்று வருந்தி எல்லாம் கடவுளுக்கே அர்ப்பணம் செய்து விட்டார்கள். இதே நேரத்தில் தன் தந்தை தாய் காசிக்குக் கிளம்பியதை அறிந்து புண்டரீகனும் ஒரு குதிரையின் மேல் தன் மனைவியுடன் கிளம்பினான், வழியில் மனைவி தன் மாமனார் மாமியார் தள்ளாமல் காலில் செருப்புமில்லாமல் நடந்து வருவதைக் கவனித்து தன் கணவரிடம் அவர்களுக்கு உதவும்படிக் கூறினாள். ஆனால் அவன் வாயை மூடிக்கொண்டு வா அவர்கள் கிழங்கள் வந்தால் நம்க்குத்தான் கஷ்டம் என்றான் இரக்கமில்லாமல்,, அங்கு ஒரு சத்திரம் தென்பட்டது அங்குப் போய் சிறிது நேரம் களைப்பாறிவிட்டுச செல்லலாம் என்று அங்கு மனைவியுடன் போனான். அதனருகில் ஒரு முனிவரின் ஆஸ்ரமம் இருந்தது, அங்கு குக்கூடக முனிவர் என்று ஒருவர் இருந்தார், பொழுது போகாமல் அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தான் ஒரு முனிவர் தென்பட்டார். உடனே அவரிடம் போய் காசி ஷேத்திரம் எங்கு உள்ளது? என்று கேட்டான்.

 காசியா? எனக்குத் தெரியாதே இது கூடத் தெரியாமல் நீங்கள் என்ன முனிவர்? காசி என்ற இடத்திற்கு நல்ல பண்புள்ளவர்கள் தான் போக வேண்டும். நீ போகவேண்டும் என்கிறாயே இதைக் கேட்டு கோபம் கொண்டு திரும்பவும் தன் இடத்திற்கு வந்து விட்டான். இரவு நேரம் தூக்கம் வராமல் வெளியில் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மூன்று பெண்கள் நுழைந்தனர், மூன்று பேரும் மிகவும் கருப்பாகவும் அழுக்குடன் கோரமாகவும் இருந்தனர், அந்த ஆஸ்ரமத்தில் நுழைந்தௌ அவர்கள் பல வேலைகள் செய்தனர். ஒருவள் வீடு கூட்டினாள், மற்றொருவள் வீடு துப்புறத் துடைத்து அழகான கோலம் இட்டாள்.பின் அந்த முனிவரின் பாதத்தை நீரால் கழுவி துடைத்து வணங்கினாள், பின் அவர்கள் வெளியே வந்தனர். என்ன ஆச்சரியம் மூன்று பேர்களும் மிகவும் அழகாக லட்சணமாக சுந்தரிகளாக வந்தனர். இது என்ன மாயை போகும் போது சகிக்க முடியாமல் இருந்தார்கள். இப்போது எப்படி இது? வியந்து புண்டரீகன் அவர்களிடம் ஓடினான் சுந்தரிகளே, நீங்கள் யார்? சொல்லுங்கள் என்றுக் கேட்டபடி ஒருவளது கையைப் பற்றினான், அவள் மிகவும் கோபம் கொண்டு கையை உதறி பின் சொன்னாள். நாங்கள் கங்கை, யமனை, ஸரஸ்வதி நதிகள், தினமும் பலர் குளிப்பதால் பாபம் சேர்ந்து அந்தப் பாபத்தைக் கழுவ இங்கு வந்து சேவைச் செய்கிறோம். இந்தக் குக்கூட முனிவருக்குச் சேவைச் செய்து எங்கள் பாபத்தைப் போக்கிக் கொள்கிறோம்.

பாபம் எங்களிடம் சேர அவலட்சணமாக மாறுவோம், இங்கு தினமும் வந்து அதைப் போக்கிக் கொள்கிறோம். போன ஜன்மப் புண்ணியத்தினால் தான் நீ எங்களைப் பார்த்திருக்கிறாய், இனியாவதும் திருந்தி பெற்றோருக்கு சேவைச் செய். நீ இத்தனை நாட்கள் செய்தப் பாபத்தைப் போக்கிக் கொள். உன் துர்குணத்தை மாற்றிக் கொள். தாய் தந்தைதான் உனக்குத் தெய்வம் அவர்களை வணங்கு புண்டரீகன் ஏதோ மந்திரச் சக்திக்குக் கட்டுப்பட்டது போல் மனம் மாறினான். தான் செய்தத் தவறுகளுக்கு வருந்தினான். பின் கங்கா தேவியிடம் கேட்டான் இந்த முனிவர் யார்? இவரைத் தொழுதால் எப்படி பாவங்கள் விலகுகின்றன ? அப்பா புண்டரீகா, இவர் கோயில் போனதில்லை, யாகம் செய்ததில்லை தான தருமம் செய்ததில்லை, ஆனால் விடாமல் பெற்றோருக்குப் பணிவிடைச் செய்து வருகிறார் அவர்களே அவரின் தெய்வம். பாபம் செய்தவர்கள் இவர் பாதத்தைத் தொட்டாலே போதும். பாபங்கள் கரைந்துப் போகும் தாயே நான் பெற்றோருக்கு பல அநீதிகளை இழைத்து விட்டேன், இப்போது திருந்தி விட்டேன் இதோ இப்போதே போகிறேன் அனருக்கு மனம் உவந்து சேவைச் செய்வேன் .திரும்பி வந்து படுத்தப்பின் காலையில் குக்கூட முனிவரைத் தரிசித்து அவர் பாதங்களைக் கழுவி மன்னிப்பும் கேட்டுக் கொண்டு பல சேவைகள் செய்தான், ஆசியும் பெற்றான் பின் பெற்றோரைத் தேடி கண்ணிரால் பாதங்களைக் கழுவினான் அதன் பின் அவன் உலகமே அவன் தாய் தந்தை தான் வேறு ஒரு சிந்தனையும் இல்லை, இதெல்ல்லாம் பார்த்த கிருஷ்ணர் அவன் சேவைக்கு மெச்சி அவனைப் பார்க்க பூலோகத்திற்கு வந்தார்.

அவன் வீட்டு வாசலில் வந்து கதவைத் தட்டினார், புண்டரீகா புண்டரீகா யார் யாராயிருந்தாலும் அங்கேயே நில்லுங்கள், நான் பெற்றோரின் சேவையில் ஈடு பட்டுள்ளேன் என்று ஒரு செங்கலைக் கதவைத்திறந்து வீசிப் போட்டான் , அந்த மாயக் கண்ணன் பக்தனுக்காக அந்தச் செங்கல் மேல் நின்று இரண்டு கைகளும் இடுப்பில் வைத்துக் கொண்டார், அப்படியே நின்றிருந்தார். வெகு நேரம் கழித்து புண்டரீகன் கதவைத் திறந்தான், பார்த்தான் கண்ணனை. தன்னை மறந்தான், அப்படியே சாஷ்டாங்கமாக வணங்கினான். இந்தப் பாபச் செயலுக்கு மன்னியுங்கள் தங்களுக்குப் போய் செங்கலைப் போட்டு அதில் நிற்கவும் சொன்னேனே புண்டரீகா உன் சேவைக்கு மெச்சினேன், ஏதாவது வரன் கேள் உங்கள் அருள் இருந்தாலே போதுமானது ஸ்வாமி புண்டரீகா உன் சேவையினால் புகழ் பெற்ற இந்த இடம் இனி பண்டரிபுரம் என்று நிலைக்கட்டும் நீ இங்கிருந்து எல்லோருக்கும் ஆசி வழங்கி வருவாய் உன்னை எல்லோரும் விட்டல் என்றும் அழைத்து என்னையே உன்னிடம் காண்பார்கள் என்றார். ஆடிமாதம் இந்த விட்டல் வந்ததால் ஏகாதசி அன்று மிகச் சிறப்பாக விரதம் இருந்து மராட்டியர்கள் கொண்டாடுகிறார்கள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஸ்ரீகிருஷ்ணன் தனது பட்டத்து ராணி மாதா ஸ்ரீ ருக்மிணிதேவியுடன் வந்து அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்ட புண்ணிய பூமி.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar