Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மகா முத்துமாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மகா முத்துமாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மகா முத்துமாரியம்மன்
  உற்சவர்: கரகம்
  அம்மன்/தாயார்: மகா முத்துமாரியம்மன்
  தல விருட்சம்: வேம்பு
  தீர்த்தம்: சுவேத நதியின் தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  புராண பெயர்: பள்ளம் நிறைந்த பகுதியாக இருந்ததால் அப்பகுதியில் விவசாயம் செய்யாமலும், அருகில் உள்ள மீனவர்கள் கடல் தொழிலுக்கு சென்று தங்க முடியாமல் இருந்தனர். பொன்னன் என்பவர் அப்பகுதியில் உள்ள மணல் திட்டில் வசித்ததால் பொன்னன் திட்டு என அழைக்கப்படுகிறது.
  ஊர்: பொன்னந்திட்டு
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடிகடைசி வெள்ளி, விஜயதசமி, புரட்டாசி நவராத்திரி, மார்கழி 30 நாள் உதய கால பூஜை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மகா முத்துமாரியம்மன் திருக்கோயில், பொன்னந்திட்டு மற்றும் மற்றும் அஞ்சல், சிதம்பரம் வட்டம், கடலூர்- 608102.  
   
போன்:
   
  +91 - 77084 31799 
    
 பொது தகவல்:
     
  கிழக்குப் பக்கம் வாயில் அமைந்துள்ளது. விமானத்தில் ஒரு கலசம், நுழைவு வாயில் முன் உள்ள மண்டபத்தில் 100 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். பலிபீடம், சிம்மம் மற்றும் 4 அடியில் குத்து விளக்கும் உள்ளது. கோயிலுக்குள் இடபக்கம் சுப்ரமணியர், வலப்பக்கம் விநாயகர் சிலைகள் உள்ளது. மேல் பக்கம் கஜலட்சுமியும் அருள்பாலிக்கின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  புத்திரபாக்கியம், திருமணத்தடை, விவசாய அபிவிருத்திக்கு சிறந்த கோயிலாக உள்ளதால் இங்கு பக்தர்கள் பிரார்த்திக்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  ஆடு, கோழி, புறா உயிருடன் மற்றும் தானியங்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  குல தெய்வ வழிபாடு, சிதம்பரம் நடராஜர், வடக்கே பாபாஜி சுவாமி, மேற்கே வள்ளலார் பிறந்த மருதூர் உள்ளதுடன், முழுக்குத்துறைக்கு தீர்த்தவாரியாக  ஸ்ரீமுஷ்னம் பூவராகசுவாமி வருகையால் கோயிலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.  
     
  தல வரலாறு:
     
  நாடார் சமூகதத்தினர் குலதெய்வ வழிபாடு நடத்தி வந்தனர். முதலில் சிறிய கொட்டகை அமைத்து கல் வைத்து வழிபாடு நடத்தினர். காலப்போக்கில் சமூகத்தினர்கள் வரி வசூல் செய்து பொது இடத்தில் கோயில் கட்டியுள்ளனர். மேலும் கோயில் வல பக்கம் பிரச்சன்னப் பெருமாள் கோயிலும் கட்டியுள்ளனர். நாடார்களின்  குலதெய்வமாக விளங்குவதல் பல்வேறுப் பகுதியில் இருந்து குலதெய்வ வழிபாட்டிற்கு வந்து செல்கின்றனர். 2016 ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar