Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வன கருப்பராயன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு வன கருப்பராயன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வன கருப்பராயன் (சுயம்பு)
  தல விருட்சம்: அரச மரம்
  புராண பெயர்: பொம்மனம்பாளையம்
  ஊர்: வடவள்ளி
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அமாவாசை , பவுர்ணமி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு சுயம்புவாக கருப்பராயன் அருள்பாலிக்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 வெள்ளிகிழமை மற்றும் அமாவாசை, பவுர்ணமியில் மட்டுமே கோயில் இருக்கும் காலை: 10 மணிமுதல் மாலை: 6 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வன கருப்பராயன் திருக்கோயில், சின்னமலை அடிவாரம், பொம்மனாம்பாளையம், வடவள்ளி, கோயம்புத்தூர்-641 046.  
   
போன்:
   
  +91 9524527038 
    
 பொது தகவல்:
     
  கிழக்கு பார்த்த கருப்பராயன் , மேற்கு பார்த்த  மகாமுனிஅமைந்துள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
   உடல்நிலை சரியில்லாமல் வருபவர்களுக்கு குணமாகும், வெள்ளி கிழமை அருள் வாக்குகூறுகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பால்குடம், கெடாவெட்டி தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  பொதுவாக மாசாணியம்மன் கோயிலில் காணப்படும் குவலை ஏந்திய நாட்ராயன் சிலை இந்த கோயிலில் அமைந்துள்ளது. மேலும் ஊஞ்சல் , அரச மரத்தடியிலுள்ள கன்னிமார் சுயம்பு உள்ளிட்டவை இந்த கோயிலின் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது.  
     
  தல வரலாறு:
     
  பல நூறு வருடங்களாக அமைந்துள்ள கருப்பாரயன் சுயம்பு 35 வருடங்கள் முன்பு ரங்கராஜ் என்பவர் அந்த வனப்பகுதியோரம் சுயம்பு அமைந்துள்ளதை கண்டுள்ளார். அதை அவர் கும்பிட்டு சென்றார். ஆனால் பராமரிப்பு ஏதும் செய்யவில்லை. இதனால் திடிரென அவருக்கு பித்து பிடித்தது போல ஆனது. பின் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து அந்த கோவிலை புனரமைத்தனர். அந்த இடத்தில் கோவிலையும் நிறுவினர் பின்னர் ரங்கராஜ்க்கு உடல்நிலை சீரானது. அன்று முதல் வனகருப்பராயரை ஊரே வழிபட துவங்கியது. பொதுவாக இந்த கோவிலில் வெள்ளிகிழமை கூறப்படும் அருள்வாக்கு மிக சிறப்பானது என்றும் கூறுவர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சுயம்புவாக கருப்பராயன் அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar