Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கன்னிமார் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கன்னிமார் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கன்னிமார்
  உற்சவர்: கன்னிமார்
  அம்மன்/தாயார்: கன்னிமார்
  புராண பெயர்: குரும்பபாளைம்
  ஊர்: மதுக்கரை மார்க்கெட்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அம்மாவாசை, பெளர்ணமி, சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். ஆடி மாத வெள்ளிக்கிழமை மற்றும் ஐந்தாவது விளக்கு பூஜை கூடுதல் சிறப்பு. ‘சுகர்பணம்’ எனும் யாகம் இக்குல பெண்கள் சிறப்புடன் வாழ வருடாவருடம் நடத்தப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  கன்னிமார் தெய்வத்திற்காக தனி கோயில். பெரும்பாலான கோயில்களில் கன்னிமாருக்கு தனி சன்னதி மட்டும் இருக்கும். இங்கு மூலவராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை: 7 மணி முதல் 8 மணி வரை மாலை: 6 மணி முதல் 8 மணி வரை 
   
முகவரி:
   
  ஸ்ரீ கன்னிமார் கோயில், குரும்பபாளையம், மதுக்கரை மார்க்கெட், கோயம்புத்தூர் - 641105  
   
போன்:
   
  +91 97508 60255 
    
 பொது தகவல்:
     
  கன்னிமார் மூலவராக அருள்பாலிக்கிறார். விநாயகர், முருகர், ஆதி கருப்பராயன், குதிரை வாகனம், வேட்டை கருப்பராயன் ஆகியோர் உள்ளனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  தொழில் வளர்ச்சி, குழந்தை பாக்கியம், உடல் நலன் உள்பட சகலவிதமான பிராத்தனைகள் உண்டு. 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு பட்டு சாத்துதல், பிரசாதம் வழங்குதல், விளக்கு வழிபாடு, அன்னதானம் வழங்குதல், பால் குடம் எடுத்தல் போன்றவை. 
    
 தலபெருமை:
     
  கன்னிமார் தெய்வத்திற்காக தனி கோயில்.
 
     
  தல வரலாறு:
     
  சூலுார் அருகே உள்ள மூலக் குரும்பபாளையம் இவர்களது குலத்தெய்வக் கோயில். இவர்கள் அப்பகுதியிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி இப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தததால் இப்பகுதி குரும்பபாளையம் என பெயர் வந்தது. பல ஆண்டுகளாக சூலுாருக்கு சாமி கும்பிட சென்ற இவர்கள், தாங்கள் வாழும் பகுதியிலே கோயில் அமைத்து வழிபட எண்ணி 30 ஆண்டுகளுக்கு முன் சிறு மேடை அமைத்து கன்னிமார் அமைத்து வழிபட துவங்கினர். பின் பக்தர்கள் உதவியுடன் கோயில் அமைக்க துவங்கி கடந்த ஆண்டு பூமி பூஜை செய்து, 21 நாளில் கட்டிய கோயில் இது. இவர்களது எல்லா கோயிலிலும் கோபுரம் அமைக்க மாட்டார்கள். குரும்ப கவுண்டரில் ‘அருது’ குலத்தவர் கோயில் வழிபாடு செய்யும் கோயில் இது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கன்னிமார் தெய்வத்திற்காக தனி கோயில்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar