Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மாகாளி அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மாகாளி அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மாகாளி அம்மன்
  உற்சவர்: மாகாளி அம்மன்
  அம்மன்/தாயார்: மாகாளி அம்மன்
  தல விருட்சம்: அரச மரம்
  தீர்த்தம்: பொன்னுாத்து தீர்த்தம்
  ஊர்: தடாகம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வெள்ளிக்கிழமைகள், ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரம், சித்திரை மாத திருவிழா, அம்மாவாசை, பெளர்ணமி  
     
 தல சிறப்பு:
     
  வன தேவதை என்பதால் காலையில் குழந்தை வடிவிலும், மதியம் உக்கிர கோலத்திலும், மாலை சாந்த சொருபியாகவும் பக்தர்களுக்கு காட்சியளிப்பது இதன் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை: 7 மணி முதல் 8 மணி வரை மாலை: 6 மணி முதல் 8 மணி வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு மாகாளி அம்மன் கோயில், தடாகம் போஸ்ட், துடியலுார் ரோடு, ராமநாதபுரம், கோவை - 641108  
   
போன்:
   
  +91 6381777916 
    
 பொது தகவல்:
     
  கோயில் வாசலில் வழி நடை பிள்ளையார், ஆதி சிவன்–(மல்லேஸ்வரன்), சக்தி வேல், செல்வ விநாயகர், சிம்ம வாகனம், பலி பீடம் ஆகியவை உண்டு. செல்வ விநாயருக்கும், வழி நடை பிள்ளையாரும் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.  
 
     
 
பிரார்த்தனை
    
  திருமண தடை, தொழில் வளர்ச்சி, குழந்தை பாக்கியம், உடல் நலன் உள்பட சகல விதமான பிராத்தனைகளுக்கும் பக்தர்கள் வழிபடுகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு புடவை சாத்துதல், அபிேஷகம் வழங்குதல், அழகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் ஆகியவை உண்டு. 
    
 தலபெருமை:
     
  முகாம்பிகை தோற்றத்தில் இவ்வம்மன் அருள்பாலிப்பது இத்தலத்தின் பெருமை.  
     
  தல வரலாறு:
     
  மலைகள் சூழ்ந்த தடாகம் பகுதியில் ராமநாதபுரம் எனும் சிற்றூரில் இக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி மக்கள் அரச மரத்தின் கீழே சிறு மேடை அமைத்து, ஆதி சிவனை (மல்லேஸ்வரன்–அதாவது மலை பகுதியை சேர்ந்த சிவன்) சுயம்பு வடிவில் அமைத்த வழிபட்டனர். பின் அரச மரத்தின் அருகே ரோட்டை ஒட்டி வழி நடை பிள்ளையார் சிறிதாக அமைத்து அதையும் அவ்வழியே செல்லும் போது வழிபட்டனர். பின் அப்பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவரின் கனவில் வன அம்மன் தோன்றி தான் துார தேசத்தை சேர்ந்தவள் என்றும் இருப்பிடம் இல்லாமல் இருக்கிறேன் என்றும், என்னை வழிபட்டால் இன்னல்களில் இருந்து உங்களையும், உங்கள் பகுதியை சேர்ந்தவர்களையும் காப்பேன் என்றும் கூறியதையடுத்து, ஆதி சிவன் அருகே சிறு மேடையில் சுயம்பு அம்மனை உருவெடுத்து வழிபட துவங்கினர். பின் 1985ம் ஆண்டு பக்தர்கள் உதவியுடன் கோயில் அமைத்து, அம்மனுக்கும் உருவம் கொடுத்து, செல்வ விநாகயர் சன்னதி அமைத்தும் இன்று வரை வழிபட்டு வருகின்றனர். பின் 1997 ம் ஆண்டு மறு சீரமைக்கப்பட்டது. இது அனைவரும் வழிபடும் பொது கோயிலாக  இன்றும் உள்ளது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: முகாம்பிகை தோற்றத்தில் இவ்வம்மன் அருள்பாலிப்பது இத்தலத்தின் பெருமை.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar