Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு விஜய கணபதி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு விஜய கணபதி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: விஜய கணபதி
  உற்சவர்: விஜய கணபதி
  அம்மன்/தாயார்: மாரியம்மன்
  தீர்த்தம்: நொய்யல் ஆறு
  புராண பெயர்: காமாட்சிபுரி
  ஊர்: ஒண்டிப்புதுார்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அமாவாசை, பெளர்ணமி, ராகு–கேது பூஜை, பிரதோசம், சங்கரஹடா சதுர்த்தி, ஆடி மாத வெள்ளிக்கிழமை, சித்திரை மாத திருவிழா என அனைத்து சன்னதிகளும் உள்ளதால் அனைத்து விசேசங்களும் சிறப்பாக நடக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  இப்பகுதி மக்கள் எல்லா காரியங்களிலும் வெற்றி பெற இங்கு முதலில் வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது. விஜய என்றால் ஜெயம் அல்லது வெற்றி என்று பொருள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை: 6 மணி முதல் 9 மணி வரை மாலை: 4 மணி முதல் 8 மணி வரை 
   
முகவரி:
   
  விஜய கணபதி கோயில் திருச்சி மெயின் ரோடு, காமாட்சிபுரம், ஒண்டிப்புதூர், கோவை - 641014  
   
போன்:
   
  +91 96883 25427 
    
 பொது தகவல்:
     
  விஜய கணபதி,  மாரியம்மன்,  சந்திர பகவான், கேது பகவான், நந்தி, பதுமை–புதுமை காவல் தெய்வங்கள், சக்தி வேல் போன்றவை உள்ளன.
 
     
 
பிரார்த்தனை
    
  திருமண தடை, தொழில் வளர்ச்சி, குழந்தை பாக்கியம் உள்பட சகலவிதமான பிராத்தனைகளும் உண்டு.
 
    
நேர்த்திக்கடன்:
    
  விநாயகருக்கு அங்க வஸ்திரம் சாத்துதல், அம்மனுக்கு புடவை அளித்தல், பிரசாதம் வழங்குதல், அழகு குத்துததல், பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் போன்றவை. 
    
 தலபெருமை:
     
  தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில் விநாயகருக்காக உருவான முதல் கோயில் இது.
 
     
  தல வரலாறு:
     
  ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவையில் சிறப்பாக செயல்பட்ட ஸ்டேன்ஸ் நிறுவனத்தின் காபி மற்றும் தேயிலைத்துாள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்காக புற நகரில் குடியிருப்புகள் கட்ட முடிவெடுக்கப்பட்டது. அன்றைய காலத்தில் ஒண்டிப்புதுார் அருகில் பல ஏக்கர் பரப்பில் தொழிலாளர்களுக்காக ஸ்டேன்ஸ் காலனி அமைக்கப்பட்டு குடி அமர்த்தப்பட்டனர். தொழில் சார்ந்த மக்கள் குடியேறியதால் தங்கள் பகுதியில் விநாயகர் கோயில் அமைத்து, தொழில் வெற்றி கிடைக்க விஜய கணபதி (ஜெயம்–வெற்றி) என்று வழிபட துவங்கினர். பின் காலப்போக்கில் அம்மன் சன்னதி வேண்டும் என எண்ணிய இவர்கள் மாரியம்மன் சன்னதி உள்பட ராகு–கேது, சந்திர பகவான் உள்ள பட பல சன்னதிகளை உருவாக்கி இன்று கோயிலாக உருவெடுத்துள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில் விநாயகருக்காக உருவான முதல் கோயில் இது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar