Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மாரியம்மன், காளியம்மன்
  அம்மன்/தாயார்: இரட்டை அம்பாள்
  தல விருட்சம்: வேம்பு
  தீர்த்தம்: சஞ்சீவி தீர்த்தம்
  ஊர்: கண்ணனூர்
  மாவட்டம்: சேலம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடித்திருவிழா, நவராத்திரி.  
     
 தல சிறப்பு:
     
  இத்தல அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒரே பீடத்தில் வலது புறத்தில் மாரியம்மனும், இடது புறத்தில் காளியம்மனும் இருக்கின்றனர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில், தாரமங்கலம்- சேலம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4290 - 252 100. 
    
 பொது தகவல்:
     
  பிரகாரத்தில் விநாயகர் மற்றும் நாகர் சன்னதிகள் உள்ளன. இக் கோயில் கேரள கோயிலின் அமைப்பில் இருப்பது சிறப்பு. இங்கு அம்மனுக்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், அம்பாள் முன்னிலையில், தொட்டில் கட்டி, கோயில் முன்புள்ள சஞ்சீவி தீர்த்தத்தை தெளித்து, அருகிலிருக்கும் ஊஞ்சலை ஆட்டினால் குழந்தைபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பேச்சு குறையுள்ளவர்கள் அம்பாளுக்கு மணிகட்டி, மாவிளக்கு எடுத்தால் குணமாகும் என்கிறார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  குழந்தையில்லாத பெண்கள் அம்பாளிடம் வேண்டி குழந்தை பாக்கியம் பெற்றால், பூக்குழி இறங்குவதாக வேண்டிக் கொள்கிறார்கள். குழந்தை பிறந்ததும், ஆடித்திருவிழாவின் போது இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். குழந்தையுடன் பூக்குழியில் இறங்கி, அதன் மத்தியில் நின்றுகொண்டே அம்பாளுக்கு பூஜை செய்த பாலை குழந்தைக்கு கொடுத்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இது பார்க்க பரவசமாக இருக்கும். இவ்வாறு, செய்வதால் அக் குழந்தை நீண்ட ஆயுளுடன், அம்பாளின் பாதுகாப்புடன் சிறப்பாக வாழும் என நம்புகின்றனர். 
    
 தலபெருமை:
     
  தாரமங்கலத்தை சுற்றியிருக்கும் 18 பட்டிக்கும் இந்த அம்பாள் குலதெய்வமாக இருக்கிறாள்.

இரட்டை அம்பாள்: ஒரே பீடத்தில் வலது புறத்தில் மாரியம்மனும், இடது புறத்தில் காளியம்மனும் இருக்கின்றனர். ஒருசமயம் மாரியம்மனை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர், கோயிலிலேயே கண்ணயர்ந்தார்.

அப்போது, காளியம்மன் அவரது கனவில் தோன்றி, தன்னை மாரியம்மனுக்கு அருகில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றாள். அதன்படி, காளியம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட் டுள்ளாள். இவர்களை அக்கா, தங்கை என இப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  பல்லாண்டுகளுக்கு முன்பு, கேரளாவிலுள்ள கண்ணனூர் மாரியம்மனை, சில பக்தர்கள் ஒரு குதிரையில் வைத்து இவ்வழியே கொண்டு சென்றனர். அவர்கள் இத்தலத்திற்கு வந்தபோது இருட்டிவிடவே, ஓய்வெடுப்பதற்காக தங்கினர். அன்றிரவில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய மாரியம்மன், தன்னை அமர்த்தியிருக்கும் இடத்தின் அடியில் சுயம்பு வடிவில் இருப்பதாகவும், அந்த இடத்திலேயே கோயில் கட்டும்படியும் கூறினாள். அந்த பக்தர் கனவில் கண்டதை மக்களிடம் கூறினார். அதன்படி, அம்பாள் சிலை இருந்த இடத்தின் அடியில் தோண்டிப் பார்த்தனர். அவ்விடத்தில் அம்பாள் சிலை இருந்தது. அவளை, அங்கேயே வைத்து கோயில் கட்டினர்.

கண்ணனூரில் இருந்து அம்பாளை கொண்டு வந்தபோது, கிடைக்கப்பெற்ற அம்மன் என்பதால் இவள், "கண்ணனூர் மாரியம்மன்' என்று அழைக்கப்பட்டாள். கண்ணனூரில் இருக்கும் மாரியம்மனின் அம்சத்தை இக்கோயிலில் காணலாம்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar