Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பிட்டாபுரத்து அம்மன்
  ஊர்: பிட்டாபுரம்
  மாவட்டம்: திருநெல்வேலி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகாசி மாதத்தில் 10 நாள் திருவிழாவும், கடைசிநாளில் தேரோட்டமும் நடத்தப்படுகிறது. ஆடி, தை மாதங்களின் கடைசி செவ்வாய் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். கார்த்திகை தீபமும், தைமாத பத்ர தீபமும், கஞ்சிப்படையலும் சிறப்பு.  
     
 தல சிறப்பு:
     
  ஆறடி உயரத்தில் நான்கடி அகலத்தில் அம்மன் பேருருவாக காட்சி தருகிறாள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் திருக்கோயில், பிட்டாபுரம் - திருநெல்வேலி மாவட்டம்.  
   
போன்:
   
  - 
    
 பொது தகவல்:
     
  இங்கு பிள்ளையார், மாடன், மாடத்தி, பிரம்மராக்ஷி, பேச்சி, 14 கன்னியர்கள் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். வழிபாட்டில் இந்த கோயில் நெல்லையப்பர் கோயிலோடு மிகுந்த தொடர்புடையதாக உள்ளது. இந்த கோயிலில் திருவிழாக்கள் முடிந்த பின் தான் நெல்லையப்பர் கோயில் திருவிழா ஆரம்பமாகிறது. வைகாசியில் பிட்டாபுரத்து அம்மனுக்கு தேர் திருவிழா முடிந்த பின் தான் ஆனி மாதத்தில் நெல்லையப்பருக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.
 
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், நோய்கள் தீரவும் பெண்கள் இத்தலத்தை சுற்றி வருகிறார்கள். பிறந்த குழந்தைகளை கூட இத்தலத்திற்குள் கொண்டு வரலாம். எந்த தீட்டும் கிடையாது. திருநீறு, நீர் தெளித்தல் ஆகியன நடக்கிறது. இதனால் சிறப்பான பலன் உள்ளது என பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  கோயில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் உள்ள அம்மனை பார்க்கும் போது, அம்மனை பிரதிஷ்டை செய்த பின் கருவறை அமைத்திருக்க வேண்டும் என தோன்றுகிறது. ஆறடி உயரத்தில் நான்கடி அகலத்தில் அம்மன் பேருருவாக காட்சி தருகிறாள். பீடத்தின் மேல் வலது காலை தூக்கி வைத்து, இடது காலை மடக்கி, வலது கையில் கீழ் நோக்கிய சூலம் வைத்து காலுக்கடியில் அசுரனுடன் அருள்பாலிக்கிறாள்.

கொடிமர மண்டபத்தின் தென்மேற்கு முகமாக சிதைவுற்ற பிள்ளையார் அதிக சக்தியுடன் விளங்குகிறார். இதன் முன்பு அமர்ந்தபடிதான் பூஜாரிகள் நோயுற்ற குழந்தைகளுக்கு திருநீறு பூசி, அம்பாளின் அபிஷேக நீரை தெளிக்கிறார்கள். பிட்டாபுரத்து தேவிக்கு "பிட்டு' நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலுக்கு வடமேற்கில் அமைந்துள்ளது பிட்டாபுரத்தம்மன் கோயில். பேச்சு வழக்கில் புட்டார்த்தியம்மன் என அழைப்பார்கள். இந்த அம்மனுக்கு பிட்டாபுரத்தி, வடவாயில் செல்வி, நெல்லை மாகாளி என பல பெயர்கள் உள்ளன.

இந்த அம்மன் அனைத்து மதத்தினருக்கும் செல்லப் பிள்ளையாக விளங்குகிறாள். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் இத்தலத்திற்கு கூட்டம் மிக அதிகமாக இருக்கும். பிள்ளைகளுக்கு பயத்தால் வரக்கூடிய 64 வகையான சீர் நோய்களுக்கு வேர்கட்டி மை இடுவார்கள். அருணாசலக்கவிராயர் தன் வாழ்நாளின் தொடக்கத்தில் இந்த அம்மனிடம் மிகுந்த பக்தி கொண்டவராக இருந்திருக்கிறார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஆறடி உயரத்தில் நான்கடி அகலத்தில் அம்மன் பேருருவாக காட்சி தருகிறாள்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar