Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பிள்ளைவயல் காளி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பிள்ளைவயல் காளி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காளியம்மன்
  ஊர்: பையூர் பிள்ளைவயல்
  மாவட்டம்: சிவகங்கை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆண்டு தோறும் ஆடி முதல் வெள்ளியன்று காப்புக்கட்டு, தீமிதி விழாக்கள் நடக்கும். கடைசி வெள்ளியன்று பூச்சொரிதல் திருவிழா சிறப்பாக நடக்கும். மாதந்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இக்கோயில் பற்றி ஆராய்ச்சி செய்த அருங்காட்சியக அதிகாரிகள் அம்மன் சிலை வடிவத்தை வைத்து பார்க்கும்போது இது ஆந்திராவில் செய்யப்பட்ட சிலை என்றும், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும் உறுதி செய்தனர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோயில், பிள்ளைவயல், பையூர், சிவகங்கை மாவட்டம் .  
   
போன்:
   
  - 
    
 பொது தகவல்:
     
  முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பின் போது, இந்து கோயில்கள் அழிக்கப்பட்டன. அச்சமயத்தில் இந்த காளியை பாதுகாக்க எண்ணி, அம்மன் சிலையை கண்மாய்க்குள் இருந்த கிணற்றில் கல்லைக்கட்டி போட்டு விட்டனர்.

பல ஆண்டுகள் கழித்து கண்மாய் தூர்வாரும் போது, சிலை வெளிப்பட்டது. பின்பு அம்பிகையை தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தனர்.

தன்னைக் காக்கும் சோதனையை மக்களுக்கு தந்த அம்பிகை, அந்த சோதனையில் வென்ற மக்களை இப்போது பாதுகாத்து வருகிறாள்.

கோயில் வயல்வெளியில் இருப்பதாலும் இந்த அம்மனுக்கு, "பிள்ளைவயல் காளியம்மன்,' என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
 
     
 
பிரார்த்தனை
    
  இக்கோயிலின் சிறப்பே குழந்தை பாக்கியம் தருவதுதான்.

திருமணமான தம்பதியர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் அடுத்தாண்டு அவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் பாதுகாப்பு, திருமணம் தடைபடும் பெண்கள் ஒவ்வொரு வெள்ளியும் தவறாமல் சென்று, விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும். 
    
 தலபெருமை:
     
  அம்பாள் மக்களை சோதிப்பாள், தன் பிள்ளைகள் சோதனையில் வெற்றி பெறுகிறார்களா என கவனிப்பாள். இப்படித்தான் சிவகங்கை மாவட்டம் பையூர் பிள்ளைவயல் காளியம்மன் 500 ஆண்டுகளுக்கு முன் மக்களை சோதித்தாள்.

முஸ்லிம் படையெடுப்பின் போது, தன் சிலைக்கு ஆபத்து வரச் செய்தாள். மக்களோ சிலையை பாதுகாத்து, அவள் வைத்த சோதனையில் வெற்றி பெற்றனர். இப்போது பராமரிப்பே இல்லாமல், கஷ்டப்படுவது போல நடிக்கிறாள்.

தன்னை பாதுகாக்க யாராவது ஒருவர் முன் வருகிறார்களா என காத்துக் கொண்டிருக்கிறாள் இந்த ஆந்திரத்து ஆதிபராசக்தி.
 
     
  தல வரலாறு:
     
  500 ஆண்டுகளுக்கு முன் பையூர் கிராம பகுதியில் வசித்த மக்கள் தங்களைப் பாதுகாக்க அம்மனின் உதவியை வேண்டினர். அவர்களின் கருத்தாக்கத்தால் உருவானாள் காளியம்மன்.

பல ஆண்டுகளாக அவர்கள் காளியை சிங்காரத்தோப்பு ஊரணிக்கரையில் வைத்து வழிபட்டனர். முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பின் போது, இந்து கோயில்கள் அழிக்கப்பட்டன. அச்சமயத்தில் இந்த காளியை பாதுகாக்க எண்ணி, அம்மன் சிலையை கண்மாய்க்குள் இருந்த கிணற்றில் கல்லைக்கட்டி போட்டு விட்டனர்.

பல ஆண்டுகள் கழித்து கண்மாய் தூர் வாரும்போது, சிலை வெளிப்பட்டது. பின்பு அம்பிகையை தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தனர். தன்னைக் காக்கும் சோதனையை மக்களுக்கு தந்த அம்பிகை, அந்த சோதனையில் வென்ற மக்களை இப்போது பாதுகாத்து வருகிறாள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயில் பற்றி ஆராய்ச்சி செய்த அருங்காட்சியக அதிகாரிகள் அம்மன் சிலை வடிவத்தை வைத்து பார்க்கும்போது இது ஆந்திராவில் செய்யப்பட்ட சிலை என்றும், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும் உறுதி செய்தனர்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar