SS கங்காஷ்டகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> கங்காஷ்டகம்
கங்காஷ்டகம்
கங்காஷ்டகம்

1. கத்யஸ்தீனி கரோடய: கதி சுதா தாம்னச்சகண்டா கதி காகோலா: கதி பன்னகா: கதி கதி த்வீபித் விஷாணாம் த்வச:
கிம் ச த்வம் ச கதி த்ரிலோக ஜனனி! த்வத்வாரி பூரோதரே மஜ்ஜஜ-ஜந்து கதம்பகம் ஸமுதயத்யே கைக மாதா யயத்

பொருள் : ஹே மூவுலகத் தாயே ! நீ எண்ணற்ற எலும்புத் துண்டுகள், மண்டையோடுகள் நிறைந்தவளாகவும், அம்ருத தாரைகளுக்கு இருப்பிடமாகவும், நீர்ப்பறவைகள், பாம்புகள் நிறைந்தும் <உள்ளாய். உன்னுள் மூழ்கும் எல்லா உயிரினங்களையும் வாழ்வில் மேலே தூக்கிவிடும் உன் பெருமையே பெருமை!

2. தேவி! த்வத்புலிநாங்கணே ஸ்திதிஜுஷாம் நிர்மாநினாம் ஞானினாம் ஸ்வல்பாஹார நிபத்த சுத்த வபுஷாம் தார்ணம் க்ருஹம் ச்ரேயஸே
நான்யத்ர க்ஷிதிமாண்ட லேச்வரசதை: ஸம்ரக்ஷிதோ பூபதே: ப்ராஸாதோ லலநாகணைரத கதோ போகீந்த்ர - போகோந்நத

பொருள் : நூற்றுக்கணக்கான அரசர்கள் காவலுள்ள, அந்தப்புரப் பெண்கள் பலர் சூழ்ந்துள்ள, படமெடுத்த ஆதிசேஷனைப் போல் உயர்ந்து விளங்கும் அரச மாளிகையை விட ஹே தேவி, உனது கரையின் மணலில் அமைந்த, கோபத்தை வென்ற, சிறிதே உணவருந்தி, தூயவர்களாகிய, உலகின் நன்மையை விரும்பும் ஞானிகளின் புல்லால் வேயப்பட்ட குடில் மேலானது.

3. தத் - தீர்த்தகதை: கதர்த்தனசதை: கிம் தைரநர்தாச்ரிதை: ஜ்யோதிஷ்டோ மமுகை: கிமீச விமுகைர்யக்ஞைரவ ஞாஹ்ருதை:
ஸூதே கேசவவாஸவாதி விபுதக் ராமாபிராமாம் ச்ரியம் கங்கே தேவி! பவத்தடே யதி குடீவாஸ: ப்ரயாஸம் வினா

பொருள் : ஹே கங்கையே! உனது கரையில் குடிலமைத்து வாழ்வது - விஷ்ணு, இந்திரன் போன்ற தேவர்களுக்கே வியப்பளிக்கும் விதமான செல்வத்தை (மனஅமைதி) அளிக்கும் எனில், எதற்காக உடலை வருத்திக் கொண்டு, பல தீர்த்த யாத்திரைகள் செய்ய வேண்டும்?
இறைநினைவின்றி (எந்திரம்போல) ஜ்யோதிஷ்டோமம் முதலிய யாகங்களை ஏன் செய்ய வேண்டும்?

4. கங்காதீரமுபேத்ய சீதலசிலாமாலம்ப்ய ஹைமா சலீம் யைராகர்ணி குதூஹலாகுலதயா கல்லோல கோலாஹல:
தே ச்ருண்வந்தி ஸூபர்வபர்வதசிலா ஸிம்ஹாஸனாத் யாஸின: ஸங்கீதாகம சுத்த ஸித்தரமணீ மஞ்ஜீர தீரத்வனீன்

பொருள் : கங்கைக்கரையை அடைந்து ஹிமாசலத்தின் குளிர்ந்த கற்பாறைகள் மீது அமர்ந்து, குதூகலத்துடன் (கங்கையின்) அலைகளின் கோலாகலமான ஒலியை யார் கேட்கிறார்களோ, அவர்கள் தேவபர்வதத்தின் (ஹிமாலயத்தின்) பாறைகளாகிய சிம்மாசனத்தில் (இந்திரன் போல) அமர்ந்து, தேவ மங்கையரின் சதங்கைகளின் ஓரங்களிலிருந்து உண்டாகும் சங்கீத (ஆகம) நூல்களின் கூற்றுப்படி அமைந்த (இனிய) ஒலியைக் கேட்கும் அனுபவம் பெறுகிறார்கள்.

அதாவது, இமயப்பாறைகள் சிம்மாசனத்திற்கும், கங்கை அலை ஓசை தேவமங்கையரின் காற்சதங்கை ஒலிக்கும் ஒப்பாகும். இமயமலைப் பாறைகளின் மீதமர்ந்து கங்கை அலையோசையைக் கேட்பது, இந்திரன் சிம்மாசனத்தில் அமர்ந்து தேவலோகத்து இசையைக் கேட்பதற்கு ஒப்பாகும்.

5. தூரம் கச்ச ஸகச்சபம் சபவதோ நாலோகயாமோ முகம் ரே வாராக பராக ஸாகமிதரைர்நாகப்ரதைர் கம்யதாம்.
ஸத்ய: ப்ரோத்யதமந்தமாருதரஜ ப்ராப்தா கபோலஸ்தலே கங்காம்ப: கணிகா விமுக்த கணிகா ஸங்காய ஸம்பாஷ்யதே

பொருள் :  சொர்க்கத்தை அளிக்கும் ஹோமத்தின் தூய புகை வெகுதூரம் செல்லட்டும். அது நமக்கு வேண்டாம். பெண்ணாசை துறந்த மகான்களின் நட்பைப் பெறும் தகுதி - மந்தமாருதத்தால் உந்தப்பட்டு, தூசியுடன் கலந்து, எங்கள் கன்னங்களில் படும் புனித கங்கை நீரின் கணங்களாலேயே ஏற்பட்டு விடுகிறது என்றல்லவா (பெரியோர்களால்) கூறப்படுகிறது!

6. விஷ்ணோஸ் ஸங்க திகாரிணீ ஹரஜடா ஜூடாட வீசாரிணீ பிராயச்சித்த நிவாரணீ ஜலகணை: புண்யௌக விஸ்தாரிணீ
பூப்ருத்கந்தரதாரிணீ நிஜஜலே மஜ்ஜஞ்ஜனோத் தாரிணிச்ரேயஸ்ஸ்வர்க விஹாரிணீ விஜயதே கங்கா மனோஹாரிணீ

பொருள் : மஹாவிஷ்ணுவுடன் தொடர்பை ஏற்படுத்துபவளும், பரமேஸ்வரனின் அடர்ந்த காடாகிய ஜடையில் சஞ்சரிப்பவளும், இமயமலையின் குகைகளில் எப்போதும் இருப்பவளும், தன் நீரில் நீராடுபவர்களை வாழ்வில் முன்னேற்றுபவளும், செல்வம் மிக்க சொர்க்கத்தில் உலவுபவளும், மனதைக் கொள்ளை கொள்பவளுமான கங்காதேவி வெற்றியுடன் விளங்குகிறாள்.

7. வாசாலம் விகலம் கலம் ச்ரிதமலம் காமாகுலம் வ்யாகுலம் சாண்டாலம் தரலம் நிபீதகரலம் தோஷாவிலம்சாகிலம்
கும்பீபாகக தம் தமந்தககராதா க்ருஷ்ய கஸ்தாரயேத் மாதர்ஜஹ்னுமுனீந்த் ரநந்தினி தவ ஸ்வல்போத பிந்தும் வினா

பொருள் : ஜஹ்னு முனிவரின் மகளாகிய கங்கையே! அளவுக்கதிகமாகப் பேசுபவன், ஊனமுற்றவன், தீய எண்ணமுடையவன், கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவன், ஆசை வசப்பட்டவன், மிகுந்த கலக்கத்துடன் இருப்பவன், இழிபிறவி, சஞ்சலமானவன், விஷம் உண்டவன், எல்லாப் பாவங்களுடன் இருப்பவன், கும்பீபாகம் என்ற நரகத்தை அடைந்தவன் - அப்படிப்பட்டவனை எமனிடமிருந்து பிடித்திழுத்து, உன் சில நீர்த் துளிகளாலன்றி வேறு யார்தான் காப்பாற்ற முடியும்?

8. ச்லேஷ்மாஷ்லேஷணயாமலேஷ்ம்ருதபி லே காலாகுலே வ்யாகுலே கண்டேகர்கரகோ ஷநாத மலினே காயே ச ஸம்மீலதி
யாம் த்யான்னபி பாரபங்குரதரம் ப்ராப்நோதி முக்திம் நர: ஸ்நாதுஸ்சேதஸி ஜாஹ்னவீ நிவஸதாத் ஸம்ஸாரஸந்தாபஹ்ருத்

பொருள் : கபம் நிறைந்த நெஞ்சுக் குழியுடனும், மரண பயத்தால் கலங்கியவனும், இறக்கும் தருவாயில் தொண்டையிலிருந்து வரும் ஓசை உடலுடன் அடங்கும்போதும் கங்கையைத் தியானித்து முக்தியை அடைகிறவனும், கங்கையில் நீராடித் தன் மனதில் ஸம்ஸாரம் என்ற பெரும் தாபத்தைக் களைபவனுமாகியவர்களின் மனதில் ஜாஹ்னவி (கங்கை) வசிப்பாளாக!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar