SS விபத்தில் இருந்து தப்ப.. - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> விபத்தில் இருந்து தப்ப..
விபத்தில் இருந்து தப்ப..
விபத்தில் இருந்து தப்ப..

ஆவி ஈரைந்தை அபரத்தே வைத்தோதில்
ஆவி ஈரைந்தை அகற்றலாம்- ஆவியீர்
ஐந்தறலாம் ஆவியீர் ஐந்துறலாம் ஆவியீர்
ஐந்திடலாம் ஓரிரண்டோடு ஆய்ந்து

குறிப்பு: ஈரைந்தை...அதாவது இரண்டையும் ஐந்தையும் பெருக்கினால் பத்து என்ற விடை வரும். இதை, ஆ என்ற எழுத்துடன் சேர்த்தால் ஆபத்து.  ஆ என்ற எழுத்தின் பக்கத்து எழுத்தான வி என்ற எழுத்துடன் சேர்த்தால் விபத்து என்றாகும். ஆக, விபத்து, ஆபத்தைத் தவிர்க்க ஐந்தெழுத்து மந் திரமான நமசிவாய என ஓத வேண்டும் என்பது ஒரு பொருள். போக்குவரத்து அதிகமாகியுள்ள இக்காலத்தில், வெளியே சென்றவர்கள் வீட்டுக்கு  பத்திரமாக திரும்ப வரவேண்டும் என்பதற்காக இந்தப் பாடலைப்பாடலாம். சம்பந்தப்பட்டவர்களும் பாடலாம், அவரைச் சார்ந்தவர்களும்  பாடலாம். சிவபெருமானுக்கு வில்வமாலை சாத்தி, திங்கள்கிழமைகளில் பாடுவது விசேஷம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar