SS
சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
காளிக்கு அண்ணன் கார்முகில் வண்ணன்காளிங்க நர்த்தனம் ஆடிக் களைத்தவன்கோளரி மாதவன் கோவிந்தன் என்வீட்டுத்தூளியில் ஆடித் தூங்க வருகவே....வானிடை சூரியன் காய்கின்ற வேளையில்ஆநிரை காத்து மேய்த்துக் களைத்தவன்தூணிடை சிங்கன் எந்தன் துரும்புமேனியில் ஒளிந்து தூங்க வருகவே... பாரதப் போரில் பார்த்தனின் தேரைசாரத்யம் செய்து சோர்ந்து களைத்தவன்நாரத மாமுனி நாவிருப்போன் என்மாரதில் புரண்டு தூங்க வருகவே... மாணிக்கக் குறளன் மாவலி ஈன்றகாணிக்கை ஏற்றுக் கால்களை நீட்டிவானுக்குத் தாவி களைத்தவன் எந்தன்ஊனுக்குள் கலந்து தூங்க வருகவே... மாம்பழக் கதுப்பு மருங்கில் கட்டியதாம்புக் கயிறால் உரலை இழுத்துகூம்பிய ஆம்பலாய்க் களைத்தவன் ஐம்புலப்பாம்பை அடக்கத் தூங்க வருகவே.... முடியில் கற்றை மயிற்பீலி புனைந்துமடியில் பட்டுப் பீதாம்பரம் அணிந்துநொடியில் ராதைக்காய் காத்துக் களைத்தவன்அடியேன் என்னகத்தில் தூங்க வருகவே... அன்னையர் துரத்த ஆயர் பாடியில்வெண்ணெய் திருடி வீதியோடிக் களைத்தவன்பின்னையின் பின்னல் நிறத்தன் என்மனத்திண்ணையில் சாய்ந்து தூங்க வருகவே... ஆசை கோபியர் அன்புக்கு அடிமையாய்ராச லீலையில் மூழ்கிக் களைத்தவன்வாச துளசி மாலை அணிந்தெனதுபூசை உள்ளில் தூங்க வருகவே... பூதனை நச்சுப் பாலொடு அவளின்வேதனை தீரக் குடித்துக் களைத்தவன்சீதரன் கோமளன் ஸ்யாமளன் என்னுளத்தீதினை விரட்டித் தூங்க வருகவே... இத்தரை இன்னல்கள் களைந்து தர்மம்புத்துயிர் பெற்றிடப் பற்பல யுகத்தில்பத்தவதாரம் பூண்டுக் களைத்தவன்புத்தியில் யோகமாய்த் தூங்க வருகவே...