சகல செல்வங்களுந் தரும் இமய கிரிராச தனயை மாதேவி நின்னைச் சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத் தமருக்கு இரங்கி மிகவும் அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகு புகழ் பெருமை இளமை அறிவு சந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ் வளிப்பாய் சுகிர்த குணசாலி! பரிபாலி! அநுகூலி! திரி சூலி! மங்கள விசாலி! மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி! மகிழ் வாமி! அபிராமி! உமையே!