Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
திருவண்ணாமலை
1. அருள்மிகு அண்ணாமலையார் கோயில்,
திருவண்ணாமலை
அருள்மிகு அண்ணாமலையார் கோயில்
மூலவர் : அண்ணாமலையார், அருணாச்சலேசுவரர்
அம்மன்/தாயார் : அபித குஜாம்பாள், உண்ணாமுலையாள்
இருப்பிடம் : திருவண்ணாமலை நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ் வசதி உள்ளது.
போன் : +91-4175 252 438. 254 425
பிரார்த்தனை : இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.கேட்கும் வரங்களை எல்லாம் தரும் மூர்த்தியாக அருணாச்சலேசுவரர் உள்ளார். கல்யாண வரம் வேண்டுவோர் , குழந்தை வரம் வேண்டுவோர், ...
சிறப்பு : *லிங்கமே மலையாக அமைந்த மலை *தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் சிவ தலம் *பஞ்சபூதம் தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. *நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என ...
2. அருள்மிகு ரேணுகாம்பாள் கோயில்,
படவேடு
அருள்மிகு ரேணுகாம்பாள் கோயில்
மூலவர் : ரேணுகாம்பாள்
இருப்பிடம் : திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சந்தவாசல் என்ற ஊரிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் படவேடு உள்ளது. காஞ்சிபுரம், வேலூர், போளூர், ஆற்காடு, ஆரணி முதலிய இடங்களிலிருந்து படவேட்டிற்கு பேருந்து வசதி உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : வேலூர் - 42 கி.மீ. திருவண்ணாமலை - 52 கி.மீ ஆரணி - 22 கி.மீ. போளூர் - 23 கி.மீ.
போன் : +91- 4181 - 248 224, 248 424.
பிரார்த்தனை : அம்மை கண்டவர்கள் இத்தலத்தில் வந்து வேண்டிக் கொள்கின்றனர். விரதமிருந்து இத்தலத்துக்கு வந்து தங்கி அம்மனுக்கு சேவை செய்து வந்து அதிக பட்சம் 3 அல்லது 5 நாட்களுக்குள் அம்மை இறங்கி ...
சிறப்பு : இங்கு அம்மன் (சிரசு மட்டும்) சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சக்தி பீடங்களில் இத்தலம் மிகவும் முக்கியமானது. மற்ற அம்மன் சன்னதிகளில் குங்குமம்தான் பிரசாதமாக தரப்படும். ...
3. அருள்மிகு ராமச்சந்திர பெருமாள் கோயில்,
நெடுங்குன்றம்
அருள்மிகு ராமச்சந்திர பெருமாள் கோயில்
மூலவர் : ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர்
அம்மன்/தாயார் : செங்கமலவல்லி
இருப்பிடம் : திருவண்ணாமலை மற்றும் வந்தவாசி - சேத்பட் வழியாக நெடுங்குன்றத்தை சென்றடையலாம். ஆரணி வந்தவாசி திருவண்ணாமலை காஞ்சி ஆகிய நகரங்களிலிருந்து பேருந்து மூலம் நெடுங்குன்றம் கோயிலுக்கு சென்றடையலாம்.
போன் : -
பிரார்த்தனை : இங்கு ராமர் சாந்த ராமராக உள்ளார்.இவரை வணங்கினால் மன அமைதி , நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.

சுதர்சன ஆழ்வாரை வணங்கினால் கல்யாண வரம் குழந்தை வரம் ஆகியன ...
சிறப்பு : ஸ்ரீ ராமர் இத்தலத்தில் மட்டுமே அமர்ந்த நிலையில் உள்ளார் என்பது விசேஷம். இத்தலத்தில் இருக்கும் ஸ்ரீ ராமனிடம் வில், அம்பு இருக்காது. அனுமன் கர்ப்பகிரகத்துக்குள்ளேயே இருப்பது ...
4. அருள்மிகு மல்லிகார்ஜுனசுவாமி கோயில்,
பர்வதமலை
அருள்மிகு மல்லிகார்ஜுனசுவாமி கோயில்
மூலவர் : மல்லிகார்ஜுனசுவாமி
அம்மன்/தாயார் : பிரமராம்பாள்
இருப்பிடம் : திருவண்ணாமலையிலிருந்து 25 கி.மீ., தூரத்தில் உள்ள இத்தலத்திற்கு தென்பாதிமங்கலம் வழியாகவும், கடலாடி வழியாகவும் செல்லலாம். பஸ் உள்ளது.
போன் : +91-94426 72283
பிரார்த்தனை : தொழில் மந்தம், திருமணத்தடை போன்ற தடைகள் உள்ளவர்கள் இம்மலைக்கு 5 அல்லது 7 அல்லது 9 முறை என விஜயம் செய்து தீபம் போட்டு வணங்கினால் ...
சிறப்பு : 26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம், ...
5. அருள்மிகு தாளபுரீஸ்வரர் கோயில்,
திருப்பனங்காடு
அருள்மிகு தாளபுரீஸ்வரர் கோயில்
மூலவர் : தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்), கிருபாபுரீஸ்வரர் என இரண்டு மூலவர்கள்.
அம்மன்/தாயார் : கிருபாநாயகி, அமிர்தவல்லி
இருப்பிடம் : காஞ்சிபுரத்தில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் பஸ்சில் சென்று திருப்பனங்காடு ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து சுமார் 1 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
போன் : +91- 44 2431 2807, 98435 68742
பிரார்த்தனை :

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சுவாமிக்கு பனம்பழம் படைத்து வழிபட்டு அதனை சாப்பிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் அப்பாக்கியம் கிடைப்பதாக நம்புகின்றனர். மேலும், சுவாமியை வழிபட ...

சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்), கிருபாபுரீஸ்வரர் என இரண்டு மூலவர்கள். கிருபாபுரீஸ்வரர் கருவறைக்கு முன்புள்ள ...
6. அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோயில்,
செய்யாறு
அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோயில்
மூலவர் : வேதபுரீசுவரர், வேதநாதர்
அம்மன்/தாயார் : இளமுலையம்பிகை, பாலஜகுஜாம்பிகை
இருப்பிடம் : சென்னை - வந்தவாசி(வழி - செய்யாறு), சென்னை - திருவண்ணாமலை(வழி - காஞ்சி செய்யாறு) மார்க்கமாக செய்யாறு வந்து கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம்.
போன் : +91- 4182-224 387
பிரார்த்தனை : இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். தலத்தில் உள்ள நாகலிங்கத்தை அபிசேகம் செய்தால் திருமணத்தடை நீங்கும். இத்தலத்தில் தலமரமாக உள்ள பனைமரத்தின் பனம்பழங்களை ...
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சுவாமி மீது தினமும் சூரியஒளி படுவது இத்தலத்தில் விசேசம்.ரத சப்தமி அன்று சூரிய ஒளிக்கதிர் விழும்.ஒரே இடத்தில் நின்று ...
7. அருள்மிகு கனககிரீசுவரர் கோயில்,
தேவிகாபுரம்
அருள்மிகு கனககிரீசுவரர் கோயில்
மூலவர் : கனககிரீசுவரர்
அம்மன்/தாயார் : பெரியநாயகி
இருப்பிடம் : திருவண்ணாமலையிலிருந்து, ஆரணி செல்லும் பஸ்களில் 50 கி.மீ., கடந்தால் தேவிகாபுரத்தை அடையலாம். பஸ் ஸ்டாப்பிலிருந்து சிறிது தூரத்தில் கோயில் உள்ளது. காஞ்சி - செய்யாறு - ஆரணி வழியாகவும், விழுப்புரம் -செஞ்சி - சேத்பட் வழியாகவும், வேலூர்- போளூர் வழியாக தேவிகா புரத்திற்கு பேருந்து வசதி உள்ளது.
போன் : +91- 4173-247 482, 247 796.
பிரார்த்தனை : இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும்.

மேலும் வேலை ...
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்புரிகிறார். ஒரே கருவறையில் எங்கும் இல்லாதபடி இரண்டு லிங்கங்கள் உள்ளது. சிறப்பு : சக்தி பீடங்களில் இதுவும் ...
8. அருள்மிகு வாலீஸ்வரர் கோயில்,
குரங்கணில்முட்டம்
அருள்மிகு வாலீஸ்வரர் கோயில்
மூலவர் : வாலீஸ்வரர், கொய்யாமலர்நாதர்
அம்மன்/தாயார் : இறையார்வளையம்மை
இருப்பிடம் : காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி சாலையில் (8 கி.மீ.) தூசி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து சுமார் 2 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம். இவ்வூருக்கு பஸ்வசதி கிடையாது. எனவே, ஆட்டோவில் செல்வது நல்லது.
போன் : +91 94456 42409, 98946 99095, 72999 04344
பிரார்த்தனை :

பாவ விமோசனம், ஞானம் மற்றும் அறிவுத்திறனும் வளரவும், சனி தோஷம் நீங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். திருமணமான பெண்களும், கர்ப்பிணிகளும் இங்குள்ள ...

சிறப்பு : இங்கு வாலீஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. இக்கோயில் பாலாற்றின் ...
9. அருள்மிகு சுப்பிரமணியர் கோயில்,
செங்கம், வில்வாரணி
அருள்மிகு சுப்பிரமணியர் கோயில்
மூலவர் : சுப்பிரமணியர்
இருப்பிடம் : திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்லும் பஸ்களில் 35 கி.மீ., தூரம் அல்லது வேலூரில் இருந்து 45 கி.மீ., பயணம் செய்து போளூரை அடைந்து, அங்கிருந்து செங்கம் செல்லும் பஸ்களில் 10 கி.மீ., தூரம் சென்றால் வில்வாரணியை அடையலாம். பஸ்ஸ்டாப் அருகிலேயே கோயில் உள்ளது. கோயிலுக்கு செல்ல 300 படிகள் ஏற வேண்டும்.
போன் : -
பிரார்த்தனை :

ஜாதகரீதியாக ராகு, கேது தோஷமுள்ளவர்கள் இந்த முருகனை வழிபட்டு துன்பம் நீங்கி இன்ப வாழ்வு பெறுவர் என்பது நம்பிக்கை. ...

சிறப்பு : இங்கு முருகன் சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் ...
10. அருள்மிகு யோகராமர் கோயில்,
படவேடு
அருள்மிகு யோகராமர் கோயில்
மூலவர் : யோக ராமச்சந்திரர்
அம்மன்/தாயார் : செண்பகவல்லி
இருப்பிடம் : திருவண்ணாமலை - வேலூர் சாலையில் 48 கி.மீ., (வேலூரில் இருந்து 32 கி.மீ.,) தூரத்திலுள்ள சந்தவாசல் சென்று, அங்கிருந்து 7 கி.மீ., சென்றால் படைவேடு செல்லலாம். பஸ் ஸ்டாப்பில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது. ஆட்டோ வசதி உண்டு.
போன் : +91 4181-248 224, 94435 40660
பிரார்த்தனை : கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக சுவாமியை வழிபடுகின்றனர். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, தம்பதியர் ஒற்றுமைக்காகவும் ...
சிறப்பு : இத்தலத்தில் ராமபிரான் புஷ்பக விமானத்தின் கீழ், வீராசனத்தில் அமர்ந்து, சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்திருக்கிறார். இது போன்ற அமைப்பை காண்பது அரிது. இங்கு ...
 
மேலும் திருவண்ணாமலை அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar