ஜெகநாத பெருமாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவம் தொடக்கம்



கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் வரும் 29 வெள்ளிக்கிழமையன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அன்று காலை 10:00 மணிக்கு சயனத்திருக்கோலம், விஸ்வரூப தரிசனம், இரவு 7:00 மணிக்கு பரமபத சொர்க்கவாசல் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்க உள்ளது. நேற்று டிச., 19ல் தொடங்கி டிச., 28 வரை காலை 10:00 மணிக்கும், டிச., 29 முதல் 2018 ஜன., 7 வரை மாலை 6:30 மணிக்கும் உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடைபெறும். கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்யபிரபந்தப்பாடல்கள் பாடப்பட்டது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்