ஆடுவோமே...வாரணமாயிரம் பாடுவோமே...



திருமணத்தடை மட்டுமின்றி, புத்திசாலியான குழந்தைகள் பிறக்கவும், சிறந்த நண்பர்கள் அமையவும் ஆண்டாள் அருளிய வாரணமாயிரத்தை பாடுங்கள்.

மார்கழியில் இதைத் துவங்குவது மிகவும் விசேஷம்.

1. வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

2. நாளை வதுவை மணமென்று நாளிட்டுப்
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்க்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்.

3. இந்திரன் உள்ளிட்ட தேவர் குலமெல்லாம்
வந்திருந்து என்னை மகள்பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

4. நால்திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக்
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

5. கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்திச்
சதிர மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்.

6. மத்தளம் கொட்ட வரிசங்கும் நின்றுõத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்.

7. வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்துக்
காய்சின மாகளி றன்னான் என் கைப்பற்றித்
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்.

8. இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்.

9. வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேலென் கைவைத்துப்
பொரிமுகம் தட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.

10. குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மணநீர்
அங்கவனோடும் உடன் சென்றங் காளைமேல்
மஞ்சன மாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.10.

11. ஆயனுக் காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ்வில்லி புத்துõர் கோன் கோதை சொல்
துõய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லார்
வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வரே.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்