பதிவு செய்த நாள்
15
நவ
2019
02:11
கூடலூர்: கூடலூர், புளியாம்பாறையில் பாரம்பரியமான பூ புத்தரி அறுவடை திருவிழா, செண்டை மேளம் இசையுடன் சிறப்பாக நடந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் நெல் அறுவடைக்கு முன், பூ புத்தரி அறுவடை திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. நடப்பு ஆண்டுக்கான, துவக்க விழா கடந்த 27ல், புத்தூர்வயல் பகுதியில் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து, பிறபகுதிகளிலும் இவ்விழா சிறப்பாக நடந்து வருகிறது. புளியாம்பாறை பகுதியில், இவ்விழா நடந்தது. ஆத்தூர் அயிரம்விள்ளி கோவிலில் சிறப்பு பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து விவசாயிகள் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக வயலை வந்தடைந்தனர்.
அங்கு, பூஜை செய்யப்பட்டு, நெற்கதிர் அறுவடை நிகழ்ச்சி நடந்தது. அறுவடை செய்யப்பட்ட, நெற் கதிர்களை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்து, இவருக்கு சிறப்பு பூஜை செய்தனர். பூஜிக்கப்பட்ட நெற்கதிர்கள், பிரசாதமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து அருள்வாக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். நாராயணன் கூறுகையில், நெற்கதிர்களை இறைவனுக்கு காணிக்கையாக செலுத்தும், இவ்விழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து நெல் அறுவடை பணிகள் துவங்கும். பூசைகளும் மக்களும் சிறப்பாக இருப்பார்கள் என்பது ஐதீகம் என, கூறினார்.