அன்னுார்:அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், நாளை (16ம் தேதி) திருவாசகம் முற்றோதுதல் நடக்கிறது.சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில், ஒவ்வொரு மாதமும், திருவாதிரை நட்சத்திரத்தன்று, திருவாசகம் முற்றோதுதல் நடக்கிறது. நாளை காலை 6:30 மணிக்கு துவங்கி, மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.பின்னர், மன்னீஸ்வரருக்கு, சிறப்பு வழிபாடு நடக்கிறது. அன்னுார், புளியம்பட்டி, அவிநாசியிலிருந்து, சிவபக்தர்கள் பங்கேற்கின்றனர்.