தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மிகப்பழமையான திருநீலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது.
ராஜராஜசோழர் மன்னர் ஆட்சி காலத்தில் கட்டியதாகவும் ஒரு சிலர் பாண்டிய மன்னர் ஆட்சி காலத்தில் இக்கோயில் கட்டியதாகவும் தெரிவிக்கின்றனர். வராகநதிக்கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் நீலகண்டேஸ்வரர், அன்னபூரணித் தாயார், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. குள்ளப்புரம் மெய்யன்பர்கள் சார்பில் பவுர்ணமி பூஜை, விளக்கு பூஜை, உலக நன்மைவேண்டி சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. திருமணத்தடை நீக்கம், தொழில் முன்னேற்றம், கல்வி போன்றவற்றுக்காக மனம் உருகி வேண்டுவோருக்கு வேண்டுதல் நிறைவேறுகிறது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இக்கோயில் சிறப்புகள் பற்றியமேலும் விபரங்கள் அறிய பூஜாரி ராஜாவை 87783 17804 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.