பதிவு செய்த நாள்
17
நவ
2019
01:11
பாலக்காடு: கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற தேர்த்திருவிழா சங்கமம் நேற்று, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில், தேர்த்திருவிழா கடந்த 14ல் துவங்கியது. முதல் நாள் விழாவில் விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி, சுப்பிரமணியர், விநாயகர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் நான்கு வீதிகளிலும் பவனி வந்தன. நேற்று காலை பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலிலும், சாத்தப்புரம் பிரசன்ன கணபதி கோவிலிலும் ரத உற்சவம் நடைபெற்றன.
நேற்று இரவு, லட்சுமி நாராயண பெருமாள் தேர், சாத்தபுரம் பிரசன்ன கணபதி கோவில் தேர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் தேர்தல் தேர் முட்டியில் சங்கமித்தன. வண்ண விளக்கொளியில் ஜொலித்த தேர்களின் சங்கமம், அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களே பரவசப்படுத்தியது, தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கும் உப தேவதைகளுக்கும் நடந்த சிறப்பு பூஜைகளுடன், மூன்று நாட்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருத்தேர் உற்சவம் நிறைவடைந்தது.