Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பாக்கம் கால பைரவர் கோவிலில் ... மயிலாப்பூரில் சத்ய சாய்பாபா ரத உற்சவம் மயிலாப்பூரில் சத்ய சாய்பாபா ரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லபை ஐயப்பன் கோயிலில் மாலையணிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வல்லபை ஐயப்பன் கோயிலில் மாலையணிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

18 நவ
2019
12:11

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று மாலையணிந்து முதல் நாள் விரதத்தை துவக்கினர். அதிகாலை 5 மணியளவில் கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. ஐயப்பன் பக்தி பாடல்கள், நாமாவளி, ஸ்தோத்திரம் செய்து வழிபட்டனர். வல்லபை விநாயகர்,

ஐயப்பன், மஞ்சமாதா ஆகிய மூலவர்கள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோயில் தலைமை குருசாமி மோகன்சாமி கூறியதாவது: கார்த்திகை 1 முதல்மார்கழி வரையுள்ள 60 நாட்களும்இரவு நேரத்தில் பஜனையும் ஞாயிற்றுக்கிழமை உலகநன்மைக்கான கூட்டுப்பிரார்த்தனை, தினமும் பகல், இரவில் அன்னதானம் நடக்க உள்ளது.கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாஸ்டிக் விழிப்புணர்விற்காக இருமுடிப்பையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதில்லை. புகையிலை பழக்கம் உள்ளவர்களும், 41 நாட்களுக்கு குறைவாக விரதம் இருப்பவர்களுக்கும் இருமுடி கட்டப்படுவதில்லை.

சபரிமலையில் கடைப்பிடிப்பதை போன்ற சுயகட்டுப்பாடு, ஒழுக்க நெறியுடன் போதிக்கப்படுகிறது, என்றார். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.


* சாயல்குடி அகில பாரதஐயப்பா சேவா சங்கத்தின் சபரிமலை ஐயப்பன்கோயிலில் நேற்று அதிகாலை முதல் சுற்றுவட்டார ஐயப்ப பக்தர்கள்மாலையணிந்து விரதத்தை துவக்கினர். பூஜகர் சண்முகதுரை பூஜைகளைசெய்தார்.


* சிக்கல்சிவதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில்கார்த்திகை மாத முதல் நாளை முன்னிட்டுஏராளமான ஐயப்ப பக்தர்கள்மாலையணிந்து விரதம் மேற்கொண்டனர். நடை திறக்கப்பட்டு,மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. சரணகோஷம் முழங்க கன்னிச்சாமி பூஜையும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar