பதிவு செய்த நாள்
18
நவ
2019
12:11
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று மாலையணிந்து முதல் நாள் விரதத்தை துவக்கினர். அதிகாலை 5 மணியளவில் கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. ஐயப்பன் பக்தி பாடல்கள், நாமாவளி, ஸ்தோத்திரம் செய்து வழிபட்டனர். வல்லபை விநாயகர்,
ஐயப்பன், மஞ்சமாதா ஆகிய மூலவர்கள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோயில் தலைமை குருசாமி மோகன்சாமி கூறியதாவது: கார்த்திகை 1 முதல்மார்கழி வரையுள்ள 60 நாட்களும்இரவு நேரத்தில் பஜனையும் ஞாயிற்றுக்கிழமை உலகநன்மைக்கான கூட்டுப்பிரார்த்தனை, தினமும் பகல், இரவில் அன்னதானம் நடக்க உள்ளது.கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாஸ்டிக் விழிப்புணர்விற்காக இருமுடிப்பையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதில்லை. புகையிலை பழக்கம் உள்ளவர்களும், 41 நாட்களுக்கு குறைவாக விரதம் இருப்பவர்களுக்கும் இருமுடி கட்டப்படுவதில்லை.
சபரிமலையில் கடைப்பிடிப்பதை போன்ற சுயகட்டுப்பாடு, ஒழுக்க நெறியுடன் போதிக்கப்படுகிறது, என்றார். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
* சாயல்குடி அகில பாரதஐயப்பா சேவா சங்கத்தின் சபரிமலை ஐயப்பன்கோயிலில் நேற்று அதிகாலை முதல் சுற்றுவட்டார ஐயப்ப பக்தர்கள்மாலையணிந்து விரதத்தை துவக்கினர். பூஜகர் சண்முகதுரை பூஜைகளைசெய்தார்.
* சிக்கல்சிவதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில்கார்த்திகை மாத முதல் நாளை முன்னிட்டுஏராளமான ஐயப்ப பக்தர்கள்மாலையணிந்து விரதம் மேற்கொண்டனர். நடை திறக்கப்பட்டு,மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. சரணகோஷம் முழங்க கன்னிச்சாமி பூஜையும் நடந்தது.