மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எல்லீஸ்நகர் ’பார்க்கிங்’ வளாகத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்ன தானம் துவக்க விழா நடந்தது.
துவக்கி வைத்து மாநில தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது: தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் அனுமதியுடன் கார்த்திகை முதல் தொடர்ந்து 60 நாட்கள் தினமும் காலை 11:30 மணி முதல் பகல் 2:30 மணி வரை அன்னதானம் வழங்கப்படும். போலீஸ் உதவி கமிஷனர் மணிவண்ணன் பங்கேற்றார். ஏற்பாடுகளை நிர்வாகிகள் பால முருகன், மணி, மனோகரன், குருசாமி, தங்கராஜ் செய்திருந்தனர்.