பதிவு செய்த நாள்
18
நவ
2019
02:11
ஆனைமலை:ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனுார், ஆதி விநாயகர் கோவிலில், கும்பாபி ஷேக விழாவில், பல ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட, நவரத்தினங்கள் கிடைத்தன.
ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனுாரில், 200 ஆண்டுகள் பழமையான, ஆதி விநாயகர் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேக விழாவில், விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், விமான கலச பிரதிஷ்டை, கும்ப அலங்காரம், 108 திரவிய ஹோமங்களுடன் துவங்கியது.ஆதி விநாயகர் கோபுர கலச கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் நடந்தது.புதிய விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக, பழமையான சிலை அகற்றப்பட்டது.
அப்போது, தலா, இரண்டு தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், பவளம், முத்து உள்ளிட்ட நவரத் தினங்கள் இருந்தன. மேலும், 1860ம் ஆண்டைச் சேர்ந்த நாணயம் மற்றும் ஒரு நெல் விதை இருந்தது. பழமையான நெல், நவரத்தினங்களை பார்த்த மக்கள், அவற்றை புதிய விநாயகர் சிலைக்கு அடியில் வைத்தனர்.