பந்தளம்: பந்தளத்தில் ஐயப்பனின் திருவாபரணத்தை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 53 நாட்களுக்கு திருவாபரணம் தரிசனத்திற்கு வைக்கப்பட்டிருக்கும்.மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மண்டல சீசன் தொடங்கி விட்டால் பக்தர்கள் அதிக அளவில் இங்கு வருகின்றனர். திருவாபரணங்களையும், இங்குள்ள சாஸ்தா கோயிலிலும் வழிபட்டு செல்கின்றனர்.
கார்த்திகை முதல் தேதியான நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணி முதல் தரிசனம் தொடங்கியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு செல்கின்றனர். டிச., 27-ம் தேதி வரையும், அதன் பின் டிச.,31 முதல் 2020 ஜன.,13 வரையிலும் அதிகாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திருவாபரணத்தை தரிசனம் செய்யலாம். மதியம் மற்றும் இரவு வேளையில் அன்னதானம் வழங்கப்படுகிறது.