Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலைக்கு மாலையணியும் போது ... எத்தனை பிரதோஷம் தரிசித்தால் விருப்பம் நிறைவேறும்? எத்தனை பிரதோஷம் தரிசித்தால் ...
முதல் பக்கம் » துளிகள்
கால பைரவாஷ்டமி: அச்சத்தை நீக்கி, வாழ்வில் வளம் தந்து காப்பார் காலபைரவர்
எழுத்தின் அளவு:
கால பைரவாஷ்டமி: அச்சத்தை நீக்கி, வாழ்வில் வளம் தந்து காப்பார் காலபைரவர்

பதிவு செய்த நாள்

19 நவ
2019
05:11

ஈசனின் அறுபத்து நான்கு வடிவங்களில் காலபைரவர் வடிவமும் ஒன்று. கால பைரவர் எதிரிகளை சம்ஹரிப்பவர் தன்னைச் சரணடைந்த பக்தர்களை பாதுகாத்து அவர்களுக்கு நலன்களையும் அருள்பவர். காசி நகரமே பைரவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அதனால்தான் அங்கு இறப்பவருக்கு மோட்சம் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது. சிவாலயங்களில் ஈசான்ய மூலையில் (வடகிழக்கு) கால பைரவர் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிப்பார். பைரவருக்கு அஷ்டமி பூஜை மிகவும் விசேஷமானது. குறிப்பாக கால பைரவாஷ்டமி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அந்தகாசுரன் தேவர்களை மகரிஷிகளை மக்களை எல்லாம் துன்புறுத்தி இம்சித்து மகிழ்ந்தான். இவர்களைக் காக்க ஈசன் திருவுள்ளம் கொண்டார். அந்தகாசுரனை அழிக்க திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் தம்முடைய திருமுகங்களில் ஒன்றான தத்புருஷத்தில் இருந்து மகா பைரவ மூர்த்தியைத் தோற்றுவித்தார். அந்த மகா காலபைரவர் அந்தகாசுரனை வதம் செய்து தேவர்களையும் முனிவர்களையும் மக்களையும் காப்பாற்றினார். படைத்தல் தொழில் செய்வதால் மும்மூர்த்தியரிலும் தானே உயர்ந்தவர் என்ற கர்வம் பிரம்ம தேவனுக்கு உண்டாயிற்று. பிரம்மதேவரின் கர்வத்தை அடக்க ஈசன் தன் அம்சமாகத் தோன்றிய கால பைரவரைக் கொண்டு பிரம்மதேவரின் ஒரு தலையைக் கொய்தார். யாருக்கும் கர்வம் இருக்கக்கூடாது என்பதற்காக ஈசன் நிகழ்த்திய லீலை இது.

இந்த தினம் கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி ஆகும். இந்த நாள்தான் கால பைரவரின் ஜன்மாஷ்டமி தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தில்  பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும். 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம் என்பதால் இவரை வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம். கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். மனிதர்களின் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படுவது இயல்பு. அப்படி நமக்கு கஷ்டம் ஏற்படும்போது நாம் சோர்ந்து போகவேண்டாம். துவண்டுவிடவும் வேண்டாம். சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவரை வழிபட்டு ஆபத்துகளில் இருந்தும் கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம். பிரம்மதேவரின் தலையைக் கொய்தவரும் பைரவர்தான் தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அழிக்க நினைத்த ஈசன் பிட்சாடன மூர்த்தியாக வடிவம் ஏற்றுச் சென்றார்.

அவரால் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத முனிவர்கள் சிவபெருமானை அழிக்க முயற்சித்தனர். கடும் கோபம் கொண்ட சிவபெருமான் காலாக்னியால் தாருகாவனத்தை அழித்தார். இதனால் உலகம் முழுக்க இருள் சூழ்ந்து சூரியனும் மறைந்து போனது பைரவ மூர்த்தியே எட்டுத் திசைகளிலும் தோன்றி ஒளியை உண்டாக்கினார். இப்படி எட்டுவிதமாகத் தோன்றிய பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் (க்ஷேத்ர பாலகர்கள்) என்று பூமியில் வணங்கப்படுகிறார்கள்.

ருரு பைரவர்
சண்ட பைரவர்
குரோதன பைரவர்
உன்மத்த பைரவர்
சம்ஹார பைரவர்
பீக்ஷன பைரவர்
கபால பைரவர்
கால பைரவர்
என எட்டு பைரவர்கள்

பைரவரே கோயிலின் காவல் தெய்வமாக இருப்பவர். எல்லா சிவாலயங்களிலும் ஆலயம் திறந்தவுடனும் இரவு கோயில் மூடப்படும் போதும் பைரவ பூஜை செய்வார்கள். சிவன் சொத்துக்களை காவல் காக்கும் அதிகாரியும் இவரே நமது எஜமானன் சனீஸ்வரனின் குருவாகவும் காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும் இருப்பவர் பைரவர் பன்னிரண்டு ராசிகள் அஷ்ட திக்குகள் பஞ்ச பூதங்கள் நவகிரகங்கள் என எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆதி தெய்வம் பைரவர் நீலநிற மேனியரான பைரவர் பாம்பை முப்புரி நூலாகத் தரித்தவர் மண்டை ஓட்டு மாலை அணிந்தவர் சூலம் பாசம் மழு கபாலம் ஏந்தியவர். திருமுடியில் பிறை நிலவு சூடியவர். பிரம்ம சிரச்சேதர், க்ஷேத்திரபாலகர், வடுகர், ஆபத்துதாரணர், காலமூர்த்தி, கஞ்சுகன், திகம்பரன் என்று பல திருப்பெயர்கள் கொண்டவர் பைரவர். நாயை வாகனமாகக் கொண்டவர். அனேகமாக திகம்பரராக காட்சி தருபவர். அகங்காரத்தை அழிக்கும் தெய்வம் சுக்கிர தோஷத்தை நீக்கும் தெய்வம். சகல சம்பத்துக்களை வழங்குபவர் பைரவர்.

 
மேலும் துளிகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். ... மேலும்
 
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். இது ... மேலும்
 
temple news
பவுர்ணமியில் சந்திரன் 16 கலைகளுடன் பரிபூரணமாக பிரகாசிக்கும். இன்று கிரிவலம் சென்று வழிபட மனஅழுத்தம், ... மேலும்
 
temple news
இன்று பங்குனி பிரதோஷ விரதம். சிவனை வழிபட எல்லாம் நன்மையும் நடக்கும்.பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar