பதிவு செய்த நாள்
20
நவ
2019
10:11
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மகா பைரவ அஷ்டமி பூஜை நடந்தது.
அட்டவீரட்டானங்களில் இரண்டாவது வீரட்டானம் திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில். ஐப்பசி மகா பைரவ பூஜை நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அனுப்பினேன் விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், தசகலசஸ்தாபனம், பஞ்சாண பூஜை, பஞ்சாவரண பூஜை, மதிருத்ர பூஜை, மதிருத்ர ஹோமம், அஷ்ட பைரவ பூஜை, பைரவர் மூலமந்திரம், மாலா மந்திர ஹோமம், பூர்ணாகுதி கடம் புறப்பாடாகி, சம்ஹார பைரவர்க்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.