பிள்ளையார்பட்டியில் நடை திறக்கும் நேரம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2019 10:11
திருப்புத்துார் : பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் கார்த்திகை முதல் கூடுதல் நேரம் நடை திறக்கப்படுகிறது.
இக்கோயிலில் வழக்கமாக பகல் 1:00 மணி முதல் 4:00 மணி வரை நடை சாத்தப்படுவது வழக்கம். தற்போது கார்த்திகை மாதத்தில் பழநி, சபரிமலைக்கு செல்ல விரதமிருக்கும் பக்தர்கள் பிள்ளையார்பட்டிக்குவருவது அதிகரிக்கும். பக்தர்களின் வசதிக்காக பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி மெ.மெய்யப்பன் மற்றும் குருவிக்கொண்டான்பட்டி பழ.பழனியப்பன் ஆகியோர் அறிவித்துள்ளதாவது:கார்த்திகை மாதம் முழுவதும் கோயில் நடை காலை 6:00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8:30 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும். மதிய வேளையில் நடை சாத்தப்படாமல் இருக்கும்.மார்கழி மாதத்தில் அதிகாலை 5:00 மணியிலிருந்து நடை திறக்கப்படும். இவ்வாறு அறிவித்துள்ளனர்.