திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே நகரத்தார் வைரவன்பட்டி வடிவுடைஅம்பாள் உடனுறை வளரொளிநாதர் கோவில் அருகில் ராஜமார்த்தாண்ட பைரவருக்கு மகாயாகம் துவங்கியது.
உலக நன்மை வேண்டி நடந்த இந்த யாகத்தை ஐதராபாத் ஜ்வாலா ப்ரயோக சென்ட்ரல், ஜ்வாலா சென்ட்ரல் மற்றும் சென்னை ஜ்வாலா டிரஸ்ட் ஆகியோர் 122வது முறையாக நடத்துகின்றனர். ஆண்டிற்கு ஒரு பைரவத்தலத்தில் மகாயாகம் நடத்துகின்றனர்.கடந்த ஆண்டு திருப்பாச்சேத்தியில் மகாயாகம் நடந்தது.இந்த ஆண்டு வைரவன்பட்டி கோயில் அருகில் யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு நேற்று பூஜை துவங்கியது. காலை 10:00 மணிக்கு வேதியர்கள் சங்கல்பம் செய்து சாளக்ராம ஆராதனை, யாகசாலையில் 108 கலசங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டது. தொடர்ந்து பூர்வாங்க பூஜை நடந்தன. பின்னர் சுத்தி பூஜை, தந்திர,மந்திர பிரதிஷ்டை நடந்தது. மாலையில் மீண்டும் துவங்கி இரவு வரை யாகசாலை பூஜை நடந்தன. யாகசாலையில் அனைத்து கடவுளர்களும் உற்ஸவர்களாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியுள்ளனர்.ஸ்ரீதர் முன்னிலையில் யாகம் நடந்தது. இன்றும் யாகபூஜை காலை 9:00 மணிக்கு துவங்குகிறது. யாகசாலை கலச புனித நீரால் பைரவரருக்கு அபிஷேக,ஆராதனைகளுடன் நிறைவடைகிறது,