பதிவு செய்த நாள்
21
நவ
2019
04:11
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல்களில், 34 லட்சத்து, 34 ஆயிரத்து, 103 ரூபாய் காணிக்கை வசூலானது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. நிரந்தர உண்டியல்களில், 25 லட்சத்து, 80 ஆயிரத்து, 488 ரூபாயும்; தட்டு காணிக்கை உண்டியல்களில், எட்டு லட்சத்து, 53 ஆயிரத்து, 615 ரூபாயும் வசூலானது.230 கிராம் தங்கம் மற்றும் 219 கிராம் வெள்ளி இருந்தது. இதில், மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த் தலைமை வகித்தார். ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளர்கள் அர்ஜூனன், அருண்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.