பதிவு செய்த நாள்
21
நவ
2019
05:11
திருவண்ணாமலை : திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் டிச.,10ல், அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இதற்காக, 6 அடி உயரமுள்ள, ராட்சத கொப்பரையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டனர். இதில் ஏற்றப்படும் மகா தீபம், 40 கி.மீ., துாரம் வரை பார்க்க முடியும்.தீபம் ஏற்றும் போது, வெப்பத்தால் கொப்பரை சேதமடையாமல் இருக்க, மேல்பாகம் 3.75 அடி, கீழ்பாகம், 2.75 அடி சுற்றளவு கொண்டவாறு, 150 கிலோ எடையில், 20 வளைய இரும்பு ராடுடன் கூடிய, செப்பு தகட்டில் செய்யப்பட்டுள்ளது. மேலும், கொப்பரையை மலை உச்சிக்கு எடுத்துச் செல்ல வசதியாக, மேல் பாகம் மற்றும் கீழ் பாகத்தில், தலா, நான்கு வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை சீரமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.