பதிவு செய்த நாள்
22
நவ
2019
12:11
கோவை: ஸ்ரீசத்யசாய்பாபா, 94ம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதியில் இரு நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
போத்தனுார், ஸ்ரீராம் நகர் ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதியில், வரும், 23 மற்றும், 24ம் தேதிகளில் சிறப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும், 23ம் தேதி காலை, 5:00 முதல் 6:00 மணி வரை ஓம்காரம், சுப்ரபாதம், நாம சங்கீர்த்தனம், பிரசாந்தி கொடியேற்றம் நடக்கிறது.காலை, 6:00 முதல், 7:00 வரை கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. இரவு, 7:00 முதல், குரு ஸ்ரீசத்ய சாய் மகிமை எனும் தலைப்பில், ஆன்மிகச் சொற்பொழிவு நடக்க உள்ளது. மறுநாள், 24ம் தேதி மாலை, 4:00 மணிக்கு ஸ்ரீசத்யசாய்பாபா திரு உருவப் படம் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு ஊர்வலம் நடக்க உள்ளது.