பதிவு செய்த நாள்
22
நவ
2019
01:11
திருவள்ளூர்:திருவள்ளூர் தேவி மீனாட்சி நகரில், சாய்பாபாவின், 94வது பிறந்த நாள் கொண்டாட் டம், இன்றும், நாளையும் (நவம்., 22, மற்றும் 23ல்) நடக்கிறது.
சாய்பாபாவின், 94வது பிறந்த நாளை முன்னிட்டு, சத்ய சாய் சேவா சமிதி சார்பில், திருவள்ளூர், என்.ஜி.ஓ., காலனி, நகராட்சி பள்ளியில், மாணவர்களுக்கு, இன்று (நவம்., 22,ல்), இனிப்பு வழங்கப்படுகிறது. நாளை, 23ம் தேதி, தேவி மீனாட்சி நகரில் உள்ள, சத்ய சாய் சேவா சமிதியில், காலை, 5:00 மணி முதல், ஓம்கார சுப்ர பாதம், சகஸ்ரநாம அர்ச்சனை, அபிஷேகம், மஹா மங்கள ஆரத்தி நடைபெறும்.அன்று மாலை, 6:30 மணிக்கு, சாய்பாபாவின் அருளுரை, பஜனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.