திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழாவை பேரூர் மருதாசல அடிகளார் துவக்கி வைத்தார்.
திருக்கோவிலூரை தலைமை யிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவர் மெய்ப்பொருள் நாயனார். திருநீற்றுச்செல்வர் என போற்றப்படும் நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவர். இவருக்கு வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் சித்தி வளாகம் அமைந்துள்ளது. இவரது 16 வது ஆண்டு குருபூஜை விழாவை சித்தி வளாக வழிபாட்டு மன்றத்தினர் நடத்தினர். காலை 8:30 மணிக்கு சித்தி வளாகத்தில் துறவிகள் மற்றும் அடியார்கள் பலரும் கலந்து கொண்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர். 9:00 மணிக்கு, மெய்ப்பொருள் நாயனாருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. துறவிகள் மற்றும் அடியார்கள் வரவேற்க, பேரூர் மருதாசல அடிகளார் இடபக் கொடியை ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து சிவனடியார்கள் பலரும் கலந்து கொண்டு இட்டலிங்க ஆத்ம லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம், ஆராதனை, மலர் வழிபாடு, ஒலி வழிபாடு நடத்தினார்கள்.