எல்லாம் அவன் செயல்’ என்று நம்மால் நினைக்க முடியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2019 03:11
‘இன்பம் வந்தால் அதற்கு காரணம் நான். துன்பம் வந்தால் அதற்கு காரணம் நீ’ என்ற மனநிலையில் தான் அனைவரும் இருக்கிறோம். இன்பம், துன்பம் இரண்டும் இரவு, பகல் போல மாறி மாறி வாழ்வில் தொடர்கிறது. இதற்குக் காரணம் கடவுளே என்ற எண்ணம் அவ்வளவு எளிதில் யாருக்கும் உண்டாவதில்லை. கடவுளை முழுமையாகச் சரணடைந்து பக்தியில் தோய்ந்துவிட்ட ஞானிகளுக்கு மட்டுமே இந்த உண்மை புரியும்.