பதிவு செய்த நாள்
02
டிச
2019
11:12
வேலூர்: வேலூர் கோட்டை கோவிலிலிருந்து, 400 ஆண்டுகளுக்கு பிறகு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு, திருக்குடை வழங்கும் வைபோக விழா நடந்தது.
வேலூர் கோட்டை கோவிலிலிருந்து, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு, திருக்குடை வழங்கும் வைபோகம், 400 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அண்ணாமலையார் திருக்குடை மற்றும் சாது சன்னியாசிகள் பாதுகாப்பு சமிதி சார்பில், வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு, திருக்குடை வழங்கும், வைபோக விழா டிச.,1ல், மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வேலூர் கோட்டை கோவிலில் இருந்து, நேற்று காலை திருவண்ணாமலைக்கு திருக்குடை புறப்பட்டது. மூன்று திருக்குடைகளுக்கு, அண்ணாமலையார் திருக்குடை சாது சன்னியாசிகள் பாதுகாப்பு சமிதி நிறுவன தலைவர் சிவப்ரத்தியங்கரா தாசன், மகாதேவன் மலை மகானந்த சித்தர், கலவை சச்சிதானந்தா சுவாமிகள் பூஜை செய்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ஜலகண்டேஸ்வரர் கோவிலிலிருந்து வாகனம் மூலம், திருக்குடைகள் எடுத்து செல்லப்பட்டன. வழி நெடுகிலும், 10 இடங்களில் திருக்குடைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.