பதிவு செய்த நாள்
02
டிச
2019
02:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பகவான் யோகிராம் சுரத்குமார், 101வது ஜெயந் தியில், புத்தக வெளியீட்டு விழா நடந்தது. திருவண்ணாமலையில், பகவான் யோகிராம் சுரத் குமார் ஆஸ்ரமத்தில், நேற்று (டிசம்., 1ல்) இரண்டாவது நாளாக, 101வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நேற்று (டிசம்., 1ல்) காலை சிறப்பு யாகசாலை பூஜை செய்யப்பட்டு, பகவான் லிங்கத்திற்கு மஹா அபிஷேகம், பூஜை நடந்தது.
தொடர்ந்து, ’தெய்வீக அனுபவங்கள்’ மற்றும் ’ஆட்கொண்ட அண்ணல்’ ஆகிய இரு புத்தக வெளியீட்டு விழா நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் பஜனை, கிருத்திகா பரத்வாஜின் குரு மகிமை குறித்த சங்கீத உபன்யாசம், குரு அர்ச்சனா மகேஷின், ’குரு நந்தி தேவா’ நாட்டிய நாடகம் நடந்தது. வெள்ளித்தேரில் பகவானின் உற்சவமூர்த்தி, ஆசிரம கிரிவலப்பாதையில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கானோர் வழிபட்டனர். ஏற்பாடுகளை, ஆசிரம தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் அருணாசலம், அறங் காவலர்கள் டாக்டர் ராமநாதன், மாதேவகி, மதர்விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, சுவாமிநாதன், குமரன், கணபதி சுப்ரமணியம் ஆகியோர் செய்திருந்தனர்.