திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கோயில் நிர்வாக அலுவலகத்தை பாரம்பரியம் மாறாமல் பராமரித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி உலகப் புகழ் பெற்ற ஆன்மிகத் தலமாகும். இங்குள்ள மிகவும் தொன்மையான குடவரைக் கோயிலில் விநாயகரை தரிசிக்க வரும் பக்தர்கள் கோயில் பேணப்படும் நிர்வாகத்தை பார்த்து வியப்பதுண்டு.
20 நகரத்தார் குடும்பங்கள் வாழையடி வாழையாக ஆண்டிற்கு இருவர் வீதம், எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற சுழற்சி முறையாக வரும் பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது. நிர்வாகத்தில் பழமை முறை, பழமையான கோயில், பழமை மரபு மாறாத வழிபாட்டு முறைகள்.... இது மட்டுமல்ல கோயில் அலுவலகத்திற்கு சென்றாலும் பழமை பறைசாற்றப்படுவதை பார்க்க முடியும். அலுவலகத்தினுள் நுழைந்தவுடன் துளசி மாடம், வாழை மரங்கள், வெற்றிலைக் கொடி... வரவேற்கும். கூரையில் இருமருங்கிலும் அரிக்கேன் விளக்குகள் தினசரி இன்றளவும் ஒளிர்கிறது. பர்மா தேக்காலான அலங்காரக் கூரையில் பல வண்ண பழைய கண்ணாடி விளக்குகள் அலங்கரிக்கின்றன. மேலும் இரு புற திண்ணைகளில் பாரம்பரிய ஆடை அணிந்து அமர்ந்து கணக்கெழுதும் பணியாளர்கள்..... என்று பழமையை இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது.