பதிவு செய்த நாள்
02
டிச
2019
03:12
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அடுத்துள்ள மணிகண்டபுரத்தில் விநாயகர், பேச்சியம்மன், கருப்பராயர், கன்னிமார் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன் தினம் காலை 8.00 மணிக்கு மஹா கணபதி ஹோமம், மஹாலட்சுமி மூலமந்தர ஜெபஹோமம், கோ பூஜை , சுமங்கலி பூஜை நடந்தது.
பிற்பகல் 2.00 மணிக்கு முளைப்பாரி எடுத்து ஆற்றில் இருந்து அழைத்து வரும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு முதல் கால யாக பூஜை , மஹா தீபாராதனை நடந்தது. மாலை 6.00 மணிக்கு விமானம் வைத்தல், யந்தர பிரதிஷ்டை, சாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. நே ற்று அதிகாலை 4.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை , மஹா தீபாராதனை கலச புறப்பாடு நடந்தது. காலை 6.30 மணிக்கு, விநாயகர், பேச்சியம்மன், கருப்பராயர், கன்னிமார் தெய்வங்களுக்கு அய்யசாமி கோவில் பூசாரி மற்றும் சிவாச்சாரியர்கள் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். பின், காலை 7.30 மணிக்கு அபிஷேக பூஜை நடந்தது. பின், அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின் ப க்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.