திருவண்ணாமலை தீப விழாவில் வெள்ளி பிரார்த்தனை உண்டியல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2019 03:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வெள்ளி பிரார்த்தனை உண்டியல் வைக்கப்பட்டது. இதில், பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கொண்டாடப்படும் தீப திருவிழாவுக்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உபயதாரர் மற்றும் கட்டளைதாரரால், காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வருமானம் கிடைக்காத காலத்தில், தீப திருவிழா நடத்தும் செலவிற்காக, கோவில் நிர்வாகம் சார்பில் நகரின் முக்கிய பிரமுகர்களுக்கு பத்திரிகை வைத்து அழைத்து, காணிக்கை செலுத்த கோருவது வழக்கம். அதன்படி கோவில் நிர்வாகத்தின் சார்பில், திருவிழாவில் மூன்றாம் நாளில், கோவில் வளாகத்தில் வெள்ளி காணிக்கை உண்டியல் வைப்பது வழக்கம். அதன்படி பழமை மாறாமல் இருக்க, நேற்று கோவில் வளாகத்தில் வெள்ளி உண்டியல் வைக்கப்பட்டது. முக்கிய பிரமுகர்கள், வெள்ளி உண்டியலில் காணிக்கை செலுத்தினர். கோவில் இணை ஆணையர் ஞானசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.