விருதுநகர்:விருதுநகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கீதபவனி (கேரல்) நடந்தது. புனித ஜான் தேவாலயத்தை சேர்ந்த கேரல் குழுவினர் கிறிஸ்தவர்கள் வீட்டிற்கு கீதபவனியாக சென்று பாட்டு பாடி ஜெபித்தனர். பாதிரியார் ஜோ டேனியல் தலைமையில் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் வந்து வேலுச்சாமிநகரில் உள்ள தேவாலய செயலாளர் விக்டர் வீட்டில் கீதபவனி செய்து ஜெபித்தனர். 20க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.