பதிவு செய்த நாள்
07
டிச
2019
12:12
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசம் அடைந்தனர்.
பொள்ளாச்சி கடைவீதி, பூமிநீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக விழா கடந்த, 2ம் தேதி வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது.3ம் தேதி யாக சாலையில் முதல்கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. 4ம் தேதி மூன்று, நான்காம் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் ஐந்தாம், ஆறாம் கால யாக பூஜைகள் நடந்தது.நேற்று காலை, 6:00 மணிக்கு ஏழாம் கால யாக பூஜையும், 7:30 மணிக்கு கடம் புறப்பாடும் நடந்தது. காலை, 8:30 மணிக்கு மூலவர் விமானம், மூலவர் சன்னதி, பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மாலை, 3:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு, 7:00 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.கும்பாபிஷேகத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி, அறநிலையத்துறை இணை ஆணையாளர் ராஜமாணிக்கம், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன்ஆகியோர் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.